ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 17, 2020, 11:32 AM IST

top-10-news-at-11am
top-10-news-at-11am

இந்திய வீரர்கள் நால்வர் கவலைக்கிடம்!

டெல்லி: இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே எல்லையில் ஏற்பட்ட வன்முறையில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, சீன தேசியக்கொடி எரிப்பு!

டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனக்கொடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, புகைப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

20 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிவிக்கும் கரோனா பரிசோதனை கருவி: ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைப்பு

ஹைதராபாத்: கரோனா பாதிப்பு பரிசோதனை முடிவுகளை 20 நிமிடங்களில் தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கருவியை ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது.

எல்லை விவகாரத்தில் பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? - ப. சிதம்பரம் கேள்வி

டெல்லி : சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி ஏழு வாரங்களாகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் எனக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

'1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை'

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்!

சென்னை: கரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 152 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் - பிசிசிஐ உறுதி

மும்பை: செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெங்களூரு, சென்னை கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை: இண்டஸ்இண்ட் வங்கியுடன் மாருதி சுசூகி!

மாருதி சூசுகி நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் முழு அளவு தொகையையும் கடனாக வழங்கவுள்ளது.

காவல் துறை சட்டத்தில் சீர்த்திருத்தம்: கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தின் காரணமாக அமெரிக்காவில் பெரும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள காவல் துறை சட்டங்களில் சீர்த்திருத்தம் மேற்கொண்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

இந்திய வீரர்கள் நால்வர் கவலைக்கிடம்!

டெல்லி: இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே எல்லையில் ஏற்பட்ட வன்முறையில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, சீன தேசியக்கொடி எரிப்பு!

டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனக்கொடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கின் கொடும்பாவி, புகைப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

20 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிவிக்கும் கரோனா பரிசோதனை கருவி: ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைப்பு

ஹைதராபாத்: கரோனா பாதிப்பு பரிசோதனை முடிவுகளை 20 நிமிடங்களில் தெரிவிக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன்கொண்ட கருவியை ஹைதராபாத் ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது.

எல்லை விவகாரத்தில் பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? - ப. சிதம்பரம் கேள்வி

டெல்லி : சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி ஏழு வாரங்களாகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் எனக் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

'1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை'

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் திருத்தங்கள் தேவை என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்!

சென்னை: கரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 152 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் - பிசிசிஐ உறுதி

மும்பை: செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெங்களூரு, சென்னை கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை: இண்டஸ்இண்ட் வங்கியுடன் மாருதி சுசூகி!

மாருதி சூசுகி நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் முழு அளவு தொகையையும் கடனாக வழங்கவுள்ளது.

காவல் துறை சட்டத்தில் சீர்த்திருத்தம்: கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தின் காரணமாக அமெரிக்காவில் பெரும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள காவல் துறை சட்டங்களில் சீர்த்திருத்தம் மேற்கொண்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.