சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அந்நிறுவனங்கள் பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியும் பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
இதில் முக்கியமானவையாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் மற்றும் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகிய நிதி நிறுவனங்கள் என தெரிகிறது.
![financial institution fraud financial institution fraud cases absconding criminals photos of absconding criminals eow economic offences wing chennai news chennai latest news fraud cases TN Police TN Police released photos of absconding criminals நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தலைமறைவு குற்றவாளிகள் படங்கள் வெளியீடு போலீஸ் மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தமிழக காவல்துறை சன்மானம் காவல்துறை Aarudhra Gold Trading Private Limited Lns International Financial Services Limited Hijau Associates Private Limited எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு சென்னை எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-eow-script-7202290_24112022222735_2411f_1669309055_792.jpg)
இந்த நிறுவனங்கள் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்தில் சுமார் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டியாக வழங்குவதாக அறிவிக்கிறது. பொதுமக்களிடம் இருந்து பணத்தைப் பெறுவதற்காக முகவர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்கிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்கள் நடத்தி, ஆசை வார்த்தைகளால் மக்களை ஈர்த்து, கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று வட்டியும், அசலும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.
இந்த மோசடி நிறுவனங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்பான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி சென்னை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
![financial institution fraud financial institution fraud cases absconding criminals photos of absconding criminals eow economic offences wing chennai news chennai latest news fraud cases TN Police TN Police released photos of absconding criminals நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தலைமறைவு குற்றவாளிகள் படங்கள் வெளியீடு போலீஸ் மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தமிழக காவல்துறை சன்மானம் காவல்துறை Aarudhra Gold Trading Private Limited Lns International Financial Services Limited Hijau Associates Private Limited எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு சென்னை எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-eow-script-7202290_24112022222735_2411f_1669309055_44.jpg)
ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1 லட்சத்து 09 ஆயிரத்து 255 பொதுமக்கள் அந்நிறுவனத்தில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தின் மீதான மோசடி புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![financial institution fraud financial institution fraud cases absconding criminals photos of absconding criminals eow economic offences wing chennai news chennai latest news fraud cases TN Police TN Police released photos of absconding criminals நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் நிதி நிறுவன மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தலைமறைவு குற்றவாளிகள் படங்கள் வெளியீடு போலீஸ் மோசடி தலைமறைவு குற்றவாளிகள் தமிழக காவல்துறை சன்மானம் காவல்துறை Aarudhra Gold Trading Private Limited Lns International Financial Services Limited Hijau Associates Private Limited எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு சென்னை எல்என்எஸ் நிதி நிறுவன மோசடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-09-eow-script-7202290_24112022222735_2411f_1669309055_1019.jpg)
அதேபோல ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவால் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹிஜாவ் நிறுவனத்திற்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஹிஜாவ் நிறுவன மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திரட்டப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் இந்நிறுவனத்தில் சுமார் 600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு செய்த தொகையின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 3 பெரிய நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மேற்கொண்டு புகார் அளிக்க தனித்தனியாக முன்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்று மோசடி வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களும் தற்போது காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தலைமறைவுக் குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவின் காவல் கண்காணிப்பாளரை அணுகி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் தகவல் உறுதியானதாக இருப்பின் சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க சன்மானமும், ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது. தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களை நம்பி தங்கள் பணத்தை பொதுமக்கள் இழக்க கூடாது. ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்து பயனடையுமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மோசடி.. அம்பலமானது எப்படி?