ETV Bharat / state

அமலுக்கு வந்தது புதிய விதி... முதலில் சிக்கியவருக்கு ரூ.10ஆயிரம் அபராதம்

author img

By

Published : Aug 21, 2019, 9:21 PM IST

சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி முதன்முதலாக குடிபோதையில் வாகனத்தை இயக்கியவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசீது

ஜூலை மாதம் புதிய வாகன மோட்டார் வாகன சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2ஆயிரம், அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம், அதிக வேகத்தில் சென்றால் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை, சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000,ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பாதுகாவலனும், வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம் எனவும் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து காவல்துறையினர்

மேலும் இதைத் தொடர்ந்து புதிய விதிகள் அமலில் வந்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று முதல் சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறையில் வந்துள்ளது. இதையறியாமல் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாதம் புதிய வாகன மோட்டார் வாகன சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2ஆயிரம், அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம், அதிக வேகத்தில் சென்றால் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை, சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000,ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பாதுகாவலனும், வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம் எனவும் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து காவல்துறையினர்

மேலும் இதைத் தொடர்ந்து புதிய விதிகள் அமலில் வந்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று முதல் சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறையில் வந்துள்ளது. இதையறியாமல் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:nullBody:புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி முதன்முதலாக குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபருக்கு ரூபாய் 10ஆயிரம் அபராதம்..

சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி குடிபோதையில் சந்தோஷ் என்ற நபர் இருசக்கர வாகனத்தை இயக்கியதால் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

கடந்த ஜூலை மாதம் புதிய வாகன மோட்டார் வாகன சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5,000. காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம்.அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதிக வேகத்தில் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவனது பாதுகாவலனும் வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபராத தொகையை போலிசார் அறிமுகப்படுத்தினர்.

இதனால் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலிசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வந்தனர்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலிசாரை நிறுத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீதும் அபராத தொகையை வசூலித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறையில் வந்துள்ளது.குடிப்போதையில் வாகனத்தை இயக்கி 10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளத்தில் பரலவாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்..

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.