ETV Bharat / state

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கு: காவல் உதவி ஆணையர் உட்பட 10 பேர் மீது வழக்கு

author img

By

Published : Nov 6, 2022, 5:35 PM IST

சென்னை திருமங்கலம் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆணையர் உட்பட 10 பேர் கைது
தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆணையர் உட்பட 10 பேர் கைது

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது காதலி ஆகியோரை கடத்தி சிறைபிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போது காவல் ஆணையராக இருந்த மகேஸ் அகர்வால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், வெங்கட கிருஷ்ண பிரசாத், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மனுதாரர் முழுமையான நீதியைப் பெற வேண்டுமெனில், இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ தனது விசாரணையை 6 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்த முகாந்திரத்தின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதையும் படிங்க: 'வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடுபவர்களுக்கு, தமிழச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது காதலி ஆகியோரை கடத்தி சிறைபிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போது காவல் ஆணையராக இருந்த மகேஸ் அகர்வால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், வெங்கட கிருஷ்ண பிரசாத், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், 'இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மனுதாரர் முழுமையான நீதியைப் பெற வேண்டுமெனில், இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதுதான் சரியாக இருக்கும். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ தனது விசாரணையை 6 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் தொழில் அதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்த முகாந்திரத்தின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதையும் படிங்க: 'வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடுபவர்களுக்கு, தமிழச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.