ETV Bharat / state

தலைமைச் செயலகத்தில் நாளை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

author img

By

Published : Nov 18, 2019, 11:24 PM IST

tamilnadu-cabinet-meeting-going-to-held-in-secretariat

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை டிச. 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. எனவே இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி விரும்புகிறது.

நாளை நடக்கும் கூட்டத்தில் மேயர்களுக்கான நேரடி தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெளிநாடு பயணம் மூலம் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை எப்போ வெளியாகப்போகுது தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை டிச. 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. எனவே இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி விரும்புகிறது.

நாளை நடக்கும் கூட்டத்தில் மேயர்களுக்கான நேரடி தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெளிநாடு பயணம் மூலம் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை எப்போ வெளியாகப்போகுது தெரியுமா?

Intro:Body:உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நாளை நடக்கிறது.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொள்வர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொது தேர்தலில் வாக்காளர்கள் நேரடியாக ஒட்டு போட்டு மேயரை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி விரும்புகிறது. எனவே நாளை நடக்கும் கூட்டத்தில் மேயர்களுக்கான நேரடி தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெளிநாடு பயணம் மூலம் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளை நடைமுறைப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.