ETV Bharat / state

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

author img

By

Published : Oct 14, 2021, 4:57 PM IST

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பான செய்தித்தொகுப்பை காணலாம்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்
தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

முன்னதாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நாளடைவில் கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும கலாச்சாரம் வந்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை ராயபுரம் குடியிருப்பில் குடும்ப பிரச்னை காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம், யானைகவுனியில் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், கள்ளக்குறிச்சியில் ஒருவர் கொலை, பழனியில் ஒருவர் பலத்த காயம் என தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

மேற்கூறிய அனைத்து சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், மேற்குவங்காளத்தில் இருந்து கள்ளச்சந்தையில் வாங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும் துப்பாக்கி கலாச்சாரம் ஓய்ந்தபாடில்லை என்றே கூறலாம்.

கள்ளத்துப்பாக்கி விவகாரம்

இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (DGP) சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் டிஸ்ஹார்ம் (OPERATION DISARM) என்ற பெயரில் ரவுடிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

இதையடுத்து கடந்த வாரம் சென்னை கீழ்பாக்கததில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரை கடத்திச் சென்று 25 லட்சம் பணம் பறித்த சம்பவமும், கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியரான துளசி தாஸ் மற்றும் சோமு ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பணத்தை பறித்துச் சென்ற சம்பவமும், இந்திராணி என்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி ஐந்து சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.

துப்பாக்கியைக் காட்டி நகை பறித்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசாவை என்கவுண்டர் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரான நஹீம் அக்தரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கி யாரிடம் இருந்து வாங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி உரிமம்

கள்ளத்துப்பாக்கி வாங்கப்படுவது எப்படி என காவல்துறை உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “ரவுடிகள், தொழிலதிபர் உட்பட பலர் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்து கள்ளத் துப்பாக்கியை வாங்கி, சர்வசாதாரணமாக அதை பாகங்களாக பிரித்து ரயில் மூலமாக பைகளில் போட்டு கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் அளிப்பதற்கான அதிகாரம் சென்னையை பொறுத்தவரையில் காவல் ஆணையருக்கும், மற்ற மாவட்டங்களில் கலெக்டருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபருக்கு பாதுகாப்பு தேவைக்காக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அடையாள சான்று, வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழில்ரீதியான விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், வருமானவரி செலுத்திய ஆவணங்கள், சொத்து விவரங்கள், மனநல சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த காவல்துறை முதல் தகவல் அறிக்கை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

உரிமம் பெருவது எப்படி?

இந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாவட்ட அலுவலகமோ அல்லது காவல் ஆணையர் அலுவலகமோ துப்பாக்கி தேவை குறித்து விசாரணை நடத்தும். குறிப்பாக சென்னையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்துவார்கள். அவர்கள், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் சேகரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது முன்னதாக குற்றவழக்குகள், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது விண்ணப்பம் உடனே நிராகரிக்கப்படும். இது தவிர விண்ணப்பதாரர் மீது காவல்துறைக்கு வேறு எந்த வகையில் சந்தேகம் இருந்தாலும், உரிமம் கொடுப்பதை நிறுத்த காவல் ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எல்லா அதிகாரங்களும் உள்ளன. இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

புதிதாக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்கிவிட வேண்டும். இந்த உரிமம் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காலத்துக்கு செல்லுபடியாகும். அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் விண்ணப்பதாரரின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். தேர்தல் காலங்களில் காவல்துறையிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட வேண்டும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

துப்பாக்கி உரிமம் பெற்ற ஒருவர் இரண்டு துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். ஆறிலிருந்து இருந்து பத்து தோட்டாக்கள் வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது. ஒரு மாநிலத்தில் உரிமம் பெற்றிருந்தால் அம்மாநிலத்தில் மட்டுமே துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடியும், காவல்துறையின் அனுமதி பெறவேண்டும்.

தற்காலிகமாக வெளிநாடு செல்லும் பட்சத்தில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய அதற்கான உரிமம் காவல் நிலையத்தில் சரண்டர் செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆயுத தடை சட்டம்

காவல்நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்றால் "ஆம்ஸ் டெபாசிட் சென்டர்" என்ற பெயரில் அரசின் அனுமதியோடு துப்பாக்கி விற்பனை செய்யும் மையத்தில் ஒப்படைக்கலாம். ஆனால் அது தொடர்பாக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் துப்பாக்கி கொண்டு செல்லக் கூடாது. உரிமம் பெற்ற துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடக் கூடாது. மரங்களை துப்பாக்கியால் சேதப்படுத்தக்கூடாது.

விண்ணப்பிக்கும் போது பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்தால் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். விலங்குகளை வேட்டையாடினால் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Conclusion: ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

முன்னதாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நாளடைவில் கள்ளத்துப்பாக்கியை பயன்படுத்தும கலாச்சாரம் வந்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை ராயபுரம் குடியிருப்பில் குடும்ப பிரச்னை காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம், யானைகவுனியில் துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், கள்ளக்குறிச்சியில் ஒருவர் கொலை, பழனியில் ஒருவர் பலத்த காயம் என தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

மேற்கூறிய அனைத்து சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், மேற்குவங்காளத்தில் இருந்து கள்ளச்சந்தையில் வாங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும் துப்பாக்கி கலாச்சாரம் ஓய்ந்தபாடில்லை என்றே கூறலாம்.

கள்ளத்துப்பாக்கி விவகாரம்

இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (DGP) சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் டிஸ்ஹார்ம் (OPERATION DISARM) என்ற பெயரில் ரவுடிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

இதையடுத்து கடந்த வாரம் சென்னை கீழ்பாக்கததில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரை கடத்திச் சென்று 25 லட்சம் பணம் பறித்த சம்பவமும், கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியரான துளசி தாஸ் மற்றும் சோமு ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பணத்தை பறித்துச் சென்ற சம்பவமும், இந்திராணி என்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி ஐந்து சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.

துப்பாக்கியைக் காட்டி நகை பறித்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசாவை என்கவுண்டர் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரான நஹீம் அக்தரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கி யாரிடம் இருந்து வாங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி உரிமம்

கள்ளத்துப்பாக்கி வாங்கப்படுவது எப்படி என காவல்துறை உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “ரவுடிகள், தொழிலதிபர் உட்பட பலர் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்து கள்ளத் துப்பாக்கியை வாங்கி, சர்வசாதாரணமாக அதை பாகங்களாக பிரித்து ரயில் மூலமாக பைகளில் போட்டு கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் அளிப்பதற்கான அதிகாரம் சென்னையை பொறுத்தவரையில் காவல் ஆணையருக்கும், மற்ற மாவட்டங்களில் கலெக்டருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபருக்கு பாதுகாப்பு தேவைக்காக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அடையாள சான்று, வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழில்ரீதியான விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், வருமானவரி செலுத்திய ஆவணங்கள், சொத்து விவரங்கள், மனநல சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த காவல்துறை முதல் தகவல் அறிக்கை நகல் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

உரிமம் பெருவது எப்படி?

இந்த ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாவட்ட அலுவலகமோ அல்லது காவல் ஆணையர் அலுவலகமோ துப்பாக்கி தேவை குறித்து விசாரணை நடத்தும். குறிப்பாக சென்னையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்துவார்கள். அவர்கள், என்ன காரணத்திற்காக துப்பாக்கி வாங்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்கிற ரீதியில் விவரங்கள் சேகரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி வாங்க விரும்புபவர்கள் மீது முன்னதாக குற்றவழக்குகள், சிவில் புகார்கள் இருந்தால் அவர்களது விண்ணப்பம் உடனே நிராகரிக்கப்படும். இது தவிர விண்ணப்பதாரர் மீது காவல்துறைக்கு வேறு எந்த வகையில் சந்தேகம் இருந்தாலும், உரிமம் கொடுப்பதை நிறுத்த காவல் ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எல்லா அதிகாரங்களும் உள்ளன. இதன் அடிப்படையில்தான் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்

புதிதாக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி வாங்கிவிட வேண்டும். இந்த உரிமம் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காலத்துக்கு செல்லுபடியாகும். அந்தக் காலக்கெடு முடிந்த பிறகு கட்டாயம் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் விண்ணப்பதாரரின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் அவசியம் தேவை.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

உரிமம் பெற்ற காலத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தால், அவர்கள் விசாரணைக்கு எந்த நேரத்திலும் உட்பட வேண்டியிருக்கும். தேர்தல் காலங்களில் காவல்துறையிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட வேண்டும். இதுதவிர, அந்தத் துப்பாக்கி தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.

துப்பாக்கி உரிமம் பெற்ற ஒருவர் இரண்டு துப்பாக்கிகளை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். ஆறிலிருந்து இருந்து பத்து தோட்டாக்கள் வரை வாங்க முடியும். துப்பாக்கி வாங்கியவர் வைத்திருக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு தோட்டாவுக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது. ஒரு மாநிலத்தில் உரிமம் பெற்றிருந்தால் அம்மாநிலத்தில் மட்டுமே துப்பாக்கியை வைத்துக்கொள்ளலாம். வேறு மாநிலங்களுக்குப் போகும்போது மறுபடியும், காவல்துறையின் அனுமதி பெறவேண்டும்.

தற்காலிகமாக வெளிநாடு செல்லும் பட்சத்தில் துப்பாக்கியை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். நிரந்தரமாக துப்பாக்கியை சரண்டர் செய்ய அதற்கான உரிமம் காவல் நிலையத்தில் சரண்டர் செய்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆயுத தடை சட்டம்

காவல்நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்றால் "ஆம்ஸ் டெபாசிட் சென்டர்" என்ற பெயரில் அரசின் அனுமதியோடு துப்பாக்கி விற்பனை செய்யும் மையத்தில் ஒப்படைக்கலாம். ஆனால் அது தொடர்பாக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் துப்பாக்கி கொண்டு செல்லக் கூடாது. உரிமம் பெற்ற துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடக் கூடாது. மரங்களை துப்பாக்கியால் சேதப்படுத்தக்கூடாது.

விண்ணப்பிக்கும் போது பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்தால் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். விலங்குகளை வேட்டையாடினால் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Conclusion: ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.