ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் கைது; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : Oct 28, 2022, 9:16 PM IST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை
வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழ்நாடு மீனவர்கள் 27.10.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (27.10.2022) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 'IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் நேற்று (27.10.2022) மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழ்நாடு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டு மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப்பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும், பாக்- ஜலசந்திப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத்தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும்' எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும்போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ: விசைப்படகு ஓட்டுநரை வீடுபுகுந்து தாக்கும் திமுக பிரமுகர்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழ்நாடு மீனவர்கள் 27.10.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (27.10.2022) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 'IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் நேற்று (27.10.2022) மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழ்நாடு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டு மீனவர்களின் 98 மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப்பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும், பாக்- ஜலசந்திப்பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத்தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும்' எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும்போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ: விசைப்படகு ஓட்டுநரை வீடுபுகுந்து தாக்கும் திமுக பிரமுகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.