ETV Bharat / state

ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.. உயர் நீதிமன்றம் கருத்து

author img

By

Published : Aug 18, 2022, 12:44 PM IST

ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.. உயர் நீதிமன்றம் கருத்து
ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.. உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும்” என கூறினார். அதேநேரம் உயர் அலுவலர்களின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.

மேலும் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளாரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, “காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில அலுவலர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக, ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை.

மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை. அதனால் மக்களின் வரிப்பணம் வீணாவது கவலை அளிக்கிறது. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரளித்தாலும் அமுக்கப்படுகின்றனர் அல்லது சுடப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு, காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

ஒரு காவல் உயர் அலுவலர் வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால், மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அலுவலர்களும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அதனை டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அலுவலர்கள் சார்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், “டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்பட கூடாது. உயர் அலுவலர்களுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம்.

காவல்துறையில் உள்ள வாகனங்களும், முன்னேறிய நடைமுறையும் தவறாக பயன்படுத்தபடக் கூடாது” என தெரிவித்தார். இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும்” என கூறினார். அதேநேரம் உயர் அலுவலர்களின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.

மேலும் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலாளாரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, “காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில அலுவலர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக, ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை.

மேலும், அனைவருக்கும் ஒரு உதவியாளர் தேவை. அதனால் மக்களின் வரிப்பணம் வீணாவது கவலை அளிக்கிறது. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரளித்தாலும் அமுக்கப்படுகின்றனர் அல்லது சுடப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளதாக தெரிவித்த அரசு தரப்பு, காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

ஒரு காவல் உயர் அலுவலர் வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால், மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அலுவலர்களும் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், அதனை டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அலுவலர்கள் சார்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், “டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ஆர்டர்லி முறையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்தப்பட கூடாது. உயர் அலுவலர்களுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம்.

காவல்துறையில் உள்ள வாகனங்களும், முன்னேறிய நடைமுறையும் தவறாக பயன்படுத்தபடக் கூடாது” என தெரிவித்தார். இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.