ETV Bharat / state

தமிழ்நாட்டில் தமிழுக்கு தடா...! ரயில்வே துறை அடாவடி

author img

By

Published : Jun 14, 2019, 12:28 PM IST

சென்னை: ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையை தெற்கு ரயில்வே அலுவலர் அனுப்பியுள்ளார்.

File pic

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த தெற்கு ரயில்வே அலுவர் சிவா தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுற்றிக்கை
தெற்கு ரயில்வே அலுவர் சிவா சுற்றறிக்கை

அதில், 'ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள்; ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். தங்களது பிரந்திய மொழிகளில் தகவல்களை பரிமாறக் கூடாது. இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை - திருமங்கலம் ரயில் பாதையில் ஒரே நேரத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கு காரணம் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ரயில் நிலைய அலுவலர்களுக்கு ஏற்பட்ட மொழி பிரச்னையே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சுற்றிக்கையை சிவா அனுப்பியுள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த சுற்றறிக்கையால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த தெற்கு ரயில்வே அலுவர் சிவா தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுற்றிக்கை
தெற்கு ரயில்வே அலுவர் சிவா சுற்றறிக்கை

அதில், 'ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள்; ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். தங்களது பிரந்திய மொழிகளில் தகவல்களை பரிமாறக் கூடாது. இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை - திருமங்கலம் ரயில் பாதையில் ஒரே நேரத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கு காரணம் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ரயில் நிலைய அலுவலர்களுக்கு ஏற்பட்ட மொழி பிரச்னையே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சுற்றிக்கையை சிவா அனுப்பியுள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த சுற்றறிக்கையால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

Intro:Body:

தமிழில் பேச கூடாது.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்  - தெற்கு ரயில்வே அதிரடி... ஆரம்பித்ததா மோடி ஆட்டம்!!





தமிழகத்தில் ஏற்கனவே இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பேசும் போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேச கூடாது என்று தெற்கு ரயில்வே அதிகாரி  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  தமிழகத்தில் இந்தியை திணிக்க மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வர முனைந்தது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்து, இந்தி கட்டாயமல்ல என்று தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும்,  சமீபத்தில் நடந்த மின்துறை தேர்வில் சுமார் 30 க்கும் மேற்பட்ட தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர் தேர்வு எழுதி பாஸ் ஆகினர். அவர்களுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. இதனால் மின்வெட்டு, மின்சார பிரச்னை உட்பட உள்ளூர் பிரச்னைகள் எழும்பேது அவற்றை உடனுக்குடன் கையாண்டு மக்கள் பிரச்னையை தீர்க்க முடியாது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை திருமங்கலம் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர் தமிழில் அருகில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில் எந்த தண்டவாளத்தில் இயக்கபட வேண்டும் என்று தெளிவாக கூறினார். அதை கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர் அப்படியே ரயிலை அவர் குறிப்பிட்ட தண்டவாளத்தில் இயக்குவதாக தெரிவித்தார். ஆனால் , வடநாட்டு ரயில்நிலைய கட்டுப்பாட்டாளரான அவர் மொழி புரியாமல்  ரயிலை அதே தண்டவாளத்தில் இயக்க உத்தரவிட்டார்.



இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நேர் எதிராக வந்து கொண்டிருந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அலறியடித்து சத்தம் போட்டனர். மக்களின் கூச்சலை கேட்டு இரண்டு ரயில் ஓட்டுனர்களும் உடனடியாக ரயிலை நிறுத்தினர். இதனால் மிகப்பெரிய ரயில் விபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.





 சென்னை கோட்டத்தை சேர்ந்த தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் அனைத்து, ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 





அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில் இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச  வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தமிழ் மொழியில் ரயில்வே தொடர்பான விஷயங்களை பேசக்கூடாது. இதை தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பணியில் இருக்கும்  அனைவரும் இதை  கடைபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கோபப் பார்வைக்கு தமிழகம் ஆளாகிவிட்டதாகவும், மோடி ஆட்டம் துவங்கிவிட்டது என்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்த வண்ணம் உள்ளது..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.