சென்னை கொருக்குபேட்டை ஓஸ்வால் கார்டனில் குடியிருப்பவர் லதா (வயது 47) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறான நோக்கத்தில் வீட்டிற்குள் அத்துமீறி இரு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.
இதனைக் கண்ட அந்தப்பெண் உடனே தனது செல்போனில் உள்ள காவலன் செயலியில் அந்த இரண்டு மர்ம நபர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார். தகவலைப்பெற்ற ஆர்.கே நகர் போலிசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து அந்த இரு மர்ம நபர்களையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சலீம் மற்றும் தாவூத் என தெரியவந்தது. மேலும் இவர்கள் காவல்துறையினரை கண்டவுடன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தபின் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்
இதையும் படிக்க: பெண்களைக் காக்க வருகிறது 'காவலன் SOS' செயலி!