ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Dec 8, 2021, 4:54 PM IST

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.8) காலை வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களைச் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த ஆடையை எட்டு தங்க பட்டன்கள் வைத்துத் தைத்திருந்ததும், மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை இருந்ததும் தெரியவந்தது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

தங்கப்பசை, தங்கப் பட்டன்களின் மொத்த எடை 700 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (டிச.8) காலை வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களைச் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணி தான் அணிந்திருந்த ஆடையை எட்டு தங்க பட்டன்கள் வைத்துத் தைத்திருந்ததும், மற்றொரு பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை இருந்ததும் தெரியவந்தது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

தங்கப்பசை, தங்கப் பட்டன்களின் மொத்த எடை 700 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.