ETV Bharat / state

பெரம்பூரில் 3 கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது!

author img

By

Published : May 26, 2022, 10:00 PM IST

சென்னையில் பெரம்பூரில் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிக்கு பழியாக நடக்க இருந்த 3 கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய 7 பேர் கொண்ட ரவுடி கும்பலை கொரட்டூர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெரம்பூரில் 3 கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது
பெரம்பூரில் 3 கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது

சென்னை: ஆவடி காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரக கொரட்டூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி பெரம்பூர் பகுதியில் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 7 பேரை கொரட்டூர் காவல் நிறைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர் பச்சைமுத்து உட்பட 12 பேர் கொண்ட காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூரில் 3 கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது

அவர்களிடமிருந்து 5 ஆசிட் பாட்டில், 12 கத்தி, 5 பைக் ,7 செல்போன், 2 கிலோ கஞ்சா, 1 எடை போடும் இயந்திரம், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலூம் கொரட்டூர் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறை விசாரனையில் குற்றவாளிகளின் நேக்கம் தெரியவந்துள்ளது: ஆவடி காமராஜர் நகரை சேர்ந்து பிரகாஷ் 27, ரேட்டை ஏரி லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் 26, புத்தகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் 20, வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 29, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக் ராபர்ட் 19, பெரம்பூரை சேர்ந்த ஈசாக் 22 , திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணகுமார் 19, ஆகியோரை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் எண் 10தில் என்கிற வீட்டில் பயங்கர கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி டி3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கே. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.

காவல் துறை விசாரணையில் குற்றவாளிகளான ஆவடி காமராஜர் நகரை சேர்ந்து பிரகாஷ், ரேட்டை ஏரி லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ், புத்தகரத்தை சேர்ந்த ஜெயக்குமார், ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளதும் என தெரியவந்துள்ளது.மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடந்த 25- ம் தேதி மாலை 6 மணியளவில் செம்பியம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காந்தி சிலை அருகே பாக்ஸர் விக்கி அவருடைய தம்பி தம்பி சீனா 27, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் பெரம்பூரை சேர்ந்த சீனா, கண்ணன், தினேஷ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சிரில் பாக்சர் விக்கி தம்பி சீனா மற்றும் தினேஷ் ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் 7 பேரும் சதித்திட்டம் தீட்டி இன்று(மே26) காலை பெரம்பூர் ராகவாச்சாரி தெருவிற்கு சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கியிருந்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் இவர்களது கொலை சதித்திட்டம் போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி கொலை: ரவுடி பிரதீப் கூட்டாளி ஆடியோ வெளியீடு

சென்னை: ஆவடி காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரக கொரட்டூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி பெரம்பூர் பகுதியில் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 7 பேரை கொரட்டூர் காவல் நிறைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர் பச்சைமுத்து உட்பட 12 பேர் கொண்ட காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூரில் 3 கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது

அவர்களிடமிருந்து 5 ஆசிட் பாட்டில், 12 கத்தி, 5 பைக் ,7 செல்போன், 2 கிலோ கஞ்சா, 1 எடை போடும் இயந்திரம், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலூம் கொரட்டூர் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறை விசாரனையில் குற்றவாளிகளின் நேக்கம் தெரியவந்துள்ளது: ஆவடி காமராஜர் நகரை சேர்ந்து பிரகாஷ் 27, ரேட்டை ஏரி லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் 26, புத்தகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் 20, வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 29, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக் ராபர்ட் 19, பெரம்பூரை சேர்ந்த ஈசாக் 22 , திருமுல்லைவாயலை சேர்ந்த கிருஷ்ணகுமார் 19, ஆகியோரை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் எண் 10தில் என்கிற வீட்டில் பயங்கர கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி டி3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் கே. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.

காவல் துறை விசாரணையில் குற்றவாளிகளான ஆவடி காமராஜர் நகரை சேர்ந்து பிரகாஷ், ரேட்டை ஏரி லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ், புத்தகரத்தை சேர்ந்த ஜெயக்குமார், ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளதும் என தெரியவந்துள்ளது.மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடந்த 25- ம் தேதி மாலை 6 மணியளவில் செம்பியம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட காந்தி சிலை அருகே பாக்ஸர் விக்கி அவருடைய தம்பி தம்பி சீனா 27, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் பெரம்பூரை சேர்ந்த சீனா, கண்ணன், தினேஷ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சிரில் பாக்சர் விக்கி தம்பி சீனா மற்றும் தினேஷ் ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் 7 பேரும் சதித்திட்டம் தீட்டி இன்று(மே26) காலை பெரம்பூர் ராகவாச்சாரி தெருவிற்கு சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கியிருந்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் இவர்களது கொலை சதித்திட்டம் போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி கொலை: ரவுடி பிரதீப் கூட்டாளி ஆடியோ வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.