ETV Bharat / state

'அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Dec 4, 2019, 5:26 PM IST

சென்னை: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

regional-meteorological-centre
puviyarasan

இதுகுறித்து அவர் " குமரி கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது" என்றார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

இதையும் படிங்க: தொடர் மழையால் ஹைவேவிஸில் கடும் மண் சரிவு; தொடர்பில்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்!

இதுகுறித்து அவர் " குமரி கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது" என்றார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

இதையும் படிங்க: தொடர் மழையால் ஹைவேவிஸில் கடும் மண் சரிவு; தொடர்பில்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 04.12.19

சூறாவளி காற்று மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தில் ஏத்பட்டுள்ள சுழற்சி காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது..
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
சூறாவளி காற்று மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்..

tn_che_02_metrology_press_meet_by_puviyarasan_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.