ETV Bharat / state

கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...!

சென்னை: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Nov 29, 2019, 7:09 PM IST

kothapaya
kothapaya

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டிக்கும்விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுதொடர்பாக பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி, ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை மத்திய அரசு இந்தியாவிற்கு அழைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவையும் எதிரித்து ஐநா மன்றத்தில் நீதி கேட்கும் நேரத்தில் இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு வரவேற்றுள்ளது.

கோத்தபய இந்தியா வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணை நியமாக நடந்திட இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை வெளியேற்றுவதற்கு அவரிடம் வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

இறுதியில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட 30க்கும் அதிகமான திராவிடர் விடுதலை கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகோ கடும்தாக்கு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டிக்கும்விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுதொடர்பாக பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் உமாபதி, ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை மத்திய அரசு இந்தியாவிற்கு அழைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவையும் எதிரித்து ஐநா மன்றத்தில் நீதி கேட்கும் நேரத்தில் இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு வரவேற்றுள்ளது.

கோத்தபய இந்தியா வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணை நியமாக நடந்திட இந்திய அரசு கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை வெளியேற்றுவதற்கு அவரிடம் வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

இறுதியில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட 30க்கும் அதிகமான திராவிடர் விடுதலை கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகோ கடும்தாக்கு

Intro:Body:இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச இந்திய வருகையை கண்டிக்கும்விதமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரங்கத்தை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகம் சார்பாக பேசிய உமாபதி கூறுகையில், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை இந்தியா அரசு இந்தியாவிற்கு அழைத்துள்ளது. 2009 இல் இனப்படுகொலையை நிகழ்த்திய மகேந்திர ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச எதிரித்து ஐநா மன்றத்தில் நீதி கேட்கும் நேரத்தில் இந்தியா அரசு அவரை இந்தியாவிற்கு வவேற்றுள்ளது என குற்றம்சாட்டினார்.

ஈழத்தமிழர்களுக்கான நீதி விசாரணை நியமாக நடித்திட இந்தியா அரசு கோரிக்கை வைக்க வேண்டும், மேலும் தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும். மேலும் தமிழர்களுக்கு 5000 வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐநா மன்றத்தில் விசாரணையை நியமாக நடத்தவேண்டும் என்பதை இந்தியா அரசு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோத்தபாய ராஜபக்ச இந்தியாவிற்கு வரவேற்ற மத்திய அரசை கண்டித்தும் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

இதில் 30 க்கும் அதிகமான திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பங்கேற்றனர். இறுதியில் காவல் துறை அனைவரையும் கைது செய்தது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.