ETV Bharat / state

சிக்காத மீராமிதுன்; தேடுதல் வேட்டையில் காவல்துறை!

விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

author img

By

Published : Oct 19, 2022, 10:56 PM IST

மீராமிதுன்
மீராமிதுன்

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று(அக்.19) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையம் படிங்க:சாலை போட்டதுபோல மோசடி: ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று(அக்.19) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையம் படிங்க:சாலை போட்டதுபோல மோசடி: ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.