ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல்

author img

By

Published : Jun 20, 2020, 1:57 PM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

fine-in-curfew violators
fine-in-curfew violators

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 88 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 325 பேரைக் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

மேலும், நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 13 கோடியே 84 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 88 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 325 பேரைக் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

மேலும், நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 13 கோடியே 84 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.