கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 88 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக ஆறு லட்சத்து 71 ஆயிரத்து 325 பேரைக் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.
மேலும், நான்கு லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 13 கோடியே 84 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.