ETV Bharat / state

Omicron அச்சம்: பள்ளிகள் திறக்கக்கூடாது என பெற்றோர் கோரிக்கை - ஒமைக்ரான் அச்சத்தால் பெற்றோர் வைத்த கோரிக்கை

தமிழ்நாட்டை தவிர அண்டை மாநிலங்களில் Omicron தொற்று விரைவாகப் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவினால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், பள்ளிகளை மூடவேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Omicron Scare parents demanding to government should be closed the schools
Omicron Scare parents demanding to government should be closed the schools
author img

By

Published : Dec 15, 2021, 6:09 PM IST

Omicron Scare: தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி, வழக்கம்போல் இயல்பாக செயல்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளை மூடிவிட்டு, ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை பணி நீக்கம் செய்வோம் - Google நிறுவனம் எச்சரிக்கை

Omicron Scare: தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்குச் செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் சுழற்சி முறை இன்றி, வழக்கம்போல் இயல்பாக செயல்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளை மூடிவிட்டு, ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களை பணி நீக்கம் செய்வோம் - Google நிறுவனம் எச்சரிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.