ETV Bharat / state

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 1:41 PM IST

Chennai rain update: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் எனவும், ஓலா ஊபர் போன்ற வசதிகள் மழையைக் காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி!
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று (நவ.28) இரவு முதல் பரவலாக மழை‌ பெய்து வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.29) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

தென் தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிக லேசான மழை பதிவாகி உள்ளன.
நேற்று இரவு முதல் சென்னை நகர் அதன் புறநகரிலும் மழையானது பரவலாக பெய்து வருகிறது.

இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் ஜிஎஸ்டி சாலை, உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இன்று காலை முதல் வானம் முழுவதும் மேகமூட்டத்தால் சூழ்ந்தும், தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஓலா, ஊபர்: சென்னையில் அலுவலகங்கள் மற்றும் வெளியில் செல்பவர்கள் வழக்கமாக ஓலா அல்லது ஊபரில் பயணிப்பது வழக்கம். ஆனால், இன்று காலை முதல் மழை பெய்து வருவதால், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு விலையை உயர்த்தியுள்ளது. மேலும், ஊபர் ஓலா செயலியில் முன்பதிவு செய்த போதிலும் யாரும் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை வானிலை மையம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேலும், டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவிக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் - நெகிழ்ச்சியில் தர்ஷினி!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று (நவ.28) இரவு முதல் பரவலாக மழை‌ பெய்து வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.29) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

தென் தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிக லேசான மழை பதிவாகி உள்ளன.
நேற்று இரவு முதல் சென்னை நகர் அதன் புறநகரிலும் மழையானது பரவலாக பெய்து வருகிறது.

இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் ஜிஎஸ்டி சாலை, உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இன்று காலை முதல் வானம் முழுவதும் மேகமூட்டத்தால் சூழ்ந்தும், தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஓலா, ஊபர்: சென்னையில் அலுவலகங்கள் மற்றும் வெளியில் செல்பவர்கள் வழக்கமாக ஓலா அல்லது ஊபரில் பயணிப்பது வழக்கம். ஆனால், இன்று காலை முதல் மழை பெய்து வருவதால், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு விலையை உயர்த்தியுள்ளது. மேலும், ஊபர் ஓலா செயலியில் முன்பதிவு செய்த போதிலும் யாரும் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை வானிலை மையம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேலும், டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவிக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான் - நெகிழ்ச்சியில் தர்ஷினி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.