ETV Bharat / state

‘செய்தியாளர்களால் தான் உயிரோடு இருக்கிறேன்’ - முகிலன் - egmore court

சென்னை: செய்தியாளர்கள், தமிழ்நாட்டு மக்களால் தான் உயிரோடு இருக்கிறேன் என, சூழலியல் போராளி முகிலன் தெரிவித்துள்ளார்.

mukilan
author img

By

Published : Jul 8, 2019, 12:34 PM IST

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப். 15ஆம் தேதி முதல் காணவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், சிபிசிஜடி போலீசார் முகிலனை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், திருப்பதி ரயில்நிலைய போலீசார் முகிலனை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சென்னை கொண்டுவரப்பட்ட முகிலனிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.

இதையடுத்து, ராயபுரத்தில் உள்ள பெருநகர இரண்டாம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் முகிலனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, முகிலன் நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வேண்டும் என்றே தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முகிலனை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

முகிலன் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கடத்திச் சென்று பல்வேறு விதமான ஊசிகள் உடலில் செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், கடத்தப்பட்டபோது நடந்தவற்றை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிப்பேன் என கூறிய முகிலன், தன்னுடைய கடத்தலுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகமும், தமிழக அரசும் முழு பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள், தமிழ்நாட்டு மக்களால் தான் உயிரோடு இருப்பதாகவும் முகிலன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப். 15ஆம் தேதி முதல் காணவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில், சிபிசிஜடி போலீசார் முகிலனை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், திருப்பதி ரயில்நிலைய போலீசார் முகிலனை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சென்னை கொண்டுவரப்பட்ட முகிலனிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.

இதையடுத்து, ராயபுரத்தில் உள்ள பெருநகர இரண்டாம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் முகிலனை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, முகிலன் நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வேண்டும் என்றே தன்னை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முகிலனை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

முகிலன் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கடத்திச் சென்று பல்வேறு விதமான ஊசிகள் உடலில் செலுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், கடத்தப்பட்டபோது நடந்தவற்றை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிப்பேன் என கூறிய முகிலன், தன்னுடைய கடத்தலுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகமும், தமிழக அரசும் முழு பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

மேலும், செய்தியாளர்கள், தமிழ்நாட்டு மக்களால் தான் உயிரோடு இருப்பதாகவும் முகிலன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Intro:முகிலனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவு*Body:


சமூக செயல்பட்டளார் முகிலன் கடந்த பிப்.14ஆம் தேதி முதல் காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனின் மனைவி ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தர் அதன் அடிப்படையில் சிபிசிஜடி போலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருப்பதி ரயில்நிலைய போலீசார் முகிலனை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதன் அடிப்படையில் சென்னை கொண்டுவந்த சிபிசிஜடி போலீசார் முகிலனிடம் 15மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி கரூரில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். மேலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யும்போது தனக்கு நெஞ்சு வலி உள்ளதாகவும் சிகிச்சை வேண்டும் என கூறி மூன்று மணி நேரத்திற்கு மேலாக முழு உடல் பரிசோதனை முகிலனுக்கு அளிக்கப்பட்டு .அதன் பின் சென்னை ராயபுரத்தில் உள்ள பெருநகர இரண்டாம் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது முகிலன் நீதிபதியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் வேண்டும் என்றே தன்னை இந்த வழக்கில் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே ரோஸ்லின் துரை அவர்கள் முகிலனை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க அனுமதித்து.மீண்டும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.



*முகிலன் பேட்டி நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தும் முன்பு முகிலன் பேட்டி*

முகிலனிடம் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க பேரம் பேசப்பட்டதாகவும் அதற்காக பணம் தருவதாகவும் கூறினார்கள் என


கடத்தி சென்று பல்வேறு விதமான ஊசிகள் உடலில் செலுத்தப்பட்டதாகவும் - முகத்தை கருப்பு துணியால் கட்டிவிட்டனர்.


கடத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் நீதிபதியிடம் மட்டுமே தெரிவிப்பேன்.


தன்னுடைய கடத்தல் விவாகரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகமும் , தமிழக அரசும் முழுக்க முழுக்க பொறுப்பு என தெரிவித்தார்.


கடத்தப்பட்ட காலங்களில் தன்னிடம் தனது மனைவி - பிள்ளைகள் இறந்துவிட்டதாக தெரிவித்து இருந்தனர்Conclusion:முகிலனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவு*
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.