மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியாகின. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேருகு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இயற்கை விவசாயம் தொடர்பாக தேக்கம்பட்டியை சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாள், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பாப்பம்மாளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது! இது கழகத்துக்கும் பெருமை!
அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் #PadmaAwards பெற்ற தமிழக செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.