ETV Bharat / state

'பாஜக அரசின் பாதந்தாங்குவதே சுகம் என்று நடக்கும் அதிமுக'  - மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Jan 6, 2020, 2:01 PM IST

சென்னை: ஊழல் என்பதே நோக்கம் பாஜக அரசின் பாதந்தாங்குவதே சுகம் என்று நடக்கும் அதிமுகவின் ஆளுநர் உரையினால் எந்தத் தாக்கமும் ஏற்படப்போவதில்லை என மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mk-stalin
mk-stalin

இது குறித்து மு.க. ஸ்டாலின் அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். இந்த ஆட்சியில் முதலமைச்சருடன், அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்துவருகின்றனர்.

கொடநாடு முதல் குட்காவரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம்வரை என எங்குப் பார்த்தாலும் கணக்கற்ற ரெய்டுகள். 4 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையும், 5 லட்சம் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன.

நீட் தேர்வில் இரட்டை வேடம், தொழில் வளர்ச்சி இல்லை, வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறைவோ, நிம்மதியோ இல்லை.

நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு வாக்களித்துள்ளது. நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம் - அரசுத் துறைகள் - அதிமுக எனும் கூட்டணி அமைத்து அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது.

'ஊழல் என்பதே நோக்கம், பாஜக அரசின் பாதந் தாங்குவதே சுகம்' என்று நடக்கும் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப்புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

இது குறித்து மு.க. ஸ்டாலின் அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். இந்த ஆட்சியில் முதலமைச்சருடன், அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்துவருகின்றனர்.

கொடநாடு முதல் குட்காவரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம்வரை என எங்குப் பார்த்தாலும் கணக்கற்ற ரெய்டுகள். 4 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையும், 5 லட்சம் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன.

நீட் தேர்வில் இரட்டை வேடம், தொழில் வளர்ச்சி இல்லை, வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறைவோ, நிம்மதியோ இல்லை.

நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு வாக்களித்துள்ளது. நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம் - அரசுத் துறைகள் - அதிமுக எனும் கூட்டணி அமைத்து அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது.

'ஊழல் என்பதே நோக்கம், பாஜக அரசின் பாதந் தாங்குவதே சுகம்' என்று நடக்கும் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப்புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

Intro:Body:

ஊழல் என்பதே நோக்கம்; பா.ஜ.க. அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்’ என்று நடக்கும்



அ.தி.மு.க. ஆட்சியில், இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை



என்பதனால் புறக்கணித்துள்ளோம்.







திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் -



சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை



 



எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம்.



இந்த ஆட்சியில்முதலமைச்சரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்அவர் மட்டுமல்ல; ‘முதலமைச்சர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி  என்றுதுணை முதல்வர்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்உள்ளாட்சித்துறை அமைச்சர்மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு  ஆளாகிதினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்து வருகின்றனர்.  நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால்மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்துவலுவிழந்துமக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது.



கொடநாடு முதல் குட்கா வரை,  ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம் வரைசெய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரைஎங்கும் ரெய்டுகள்ரெய்டுகள்ரெய்டுகள்கணக்கற்ற ரெய்டுகள். “ரெய்டுகள்என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகிமாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது.



 4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள்என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும்குற்றங்கள் பெருகியும் கூடஅது குறித்துக் கிஞ்சிற்றும் கலங்காமல்கடுகளவும் கவலைப்படாமல், ‘என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே’ என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது.         



நீட் தேர்வில் இரட்டை வேடம்தொழில் வளர்ச்சி இல்லைசட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லைவேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லைஅறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லைவிவசாயிகளுக்கும்நெசவாளர்களுக்கும்மீனவர்களுக்கும்அரசு ஊழியர்களுக்கும்ஆசிரியர்களுக்கும்இந்த ஆட்சியில் நிறைவோநிம்மதியோ இல்லை.



மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து - நாட்டில் பிளவுண்டாக்கும்மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்துஅது நிறைவேறக் காரணமாகிசிறுபான்மை இஸ்லாமியர்க்கும்இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துதவறுகளுக்கெல்லாம் உச்ச கட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அதிமுக



நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்மாநிலத் தேர்தல் ஆணையம்காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்துஅராஜகம்அதிகார துஷ்பிரயோகம்அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.



நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும்யாருக்கும் பயன்படாதஅதிமுகவினர்க்கு மட்டுமே பயன்படுகிறபொல்லாத - ஒருதலை  ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.



மக்கள் நலனில் எப்போதும்  ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப் பட்ட எதிர்மறை ஆட்சியில்; “ஊழல் என்பதே நோக்கம்பாஜக அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்”- என்று நடக்கும் அதிமுக ஆட்சியில்ஏதோ சடங்குக்காகவும்சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லைஎனவே அந்த உரையைப்  புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.