ETV Bharat / state

"நமது வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்" - மா.செ கூட்டத்தில் திமுக தலைவர் அதிரடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 5:36 PM IST

MK Stalin: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அந்த மாவட்ட செயலாளர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக வேட்பாளர் தோற்றால் பதவி நீக்கம் உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
திமுக வேட்பாளர் தோற்றால் பதவி நீக்கம் உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.1) திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதும், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு என சரியாக செயல்படாத ஆறு மாவட்ட செயலாளர்களை மு.க.ஸ்டாலின் பேசக் கூறினார்.

குறிப்பாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியபடி, நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வந்தாலும், சில மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படாததாகவும் அவர் கண்டித்தார்.

அதில், சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள் என்றும் இது நல்லதல்ல என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் யாராவது தோற்றால், அந்த மாவட்ட செயலாளர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்துக் கொள்கிறேன். முதலில் கட்சிதான் முக்கியம். கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் சிலர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. தொகுதி பொறுப்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், ஒத்துழைப்பையும் அனைவரும் வழங்க வேண்டும்” எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி பொறுப்பாளர்களுக்கு உத்தரவு: சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், வாரம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்கு சென்று, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாவட்ட செயலாளர், அப்பகுதி நிர்வாகிகள் செய்துள்ள களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து எனக்கு அறிக்கையாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக அடுத்ததாக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.1) திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதும், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு என சரியாக செயல்படாத ஆறு மாவட்ட செயலாளர்களை மு.க.ஸ்டாலின் பேசக் கூறினார்.

குறிப்பாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியபடி, நூறு வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வந்தாலும், சில மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படாததாகவும் அவர் கண்டித்தார்.

அதில், சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள் என்றும் இது நல்லதல்ல என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் யாராவது தோற்றால், அந்த மாவட்ட செயலாளர் நிச்சயமாக பதவி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்துக் கொள்கிறேன். முதலில் கட்சிதான் முக்கியம். கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் சிலர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. தொகுதி பொறுப்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், ஒத்துழைப்பையும் அனைவரும் வழங்க வேண்டும்” எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி பொறுப்பாளர்களுக்கு உத்தரவு: சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், வாரம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்கு சென்று, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாவட்ட செயலாளர், அப்பகுதி நிர்வாகிகள் செய்துள்ள களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து எனக்கு அறிக்கையாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜக அடுத்ததாக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.