ETV Bharat / state

'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' அதிமுகவுடன் இணைக்க முடிவு - ஜெ. தீபா

author img

By

Published : Aug 19, 2019, 10:48 PM IST

சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தாய்க்கழகமான அதிமுகவுடன் இணைக்க கடிதம் அனுப்பி இருப்பதாக ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

அம்மா தீபா

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா கூறுகையில், எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தேன். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்தது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் எங்கள் பேரவை அளித்த ஆதரவை அதிகமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் இணைகிறோம்.

மேலும் கூறிய அவர், அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறோம். இன்று தான் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா கூறுகையில், எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தேன். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்தது.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் எங்கள் பேரவை அளித்த ஆதரவை அதிகமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர். தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் இணைகிறோம்.

மேலும் கூறிய அவர், அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறோம். இன்று தான் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறினார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 19.08.19

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்க உள்ளோம் ஜெ. தீபா பேட்டி..

ஜெ.தீபா சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எனது உடல்நிலை காரணத்தினால் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிதிருந்தேன்.
இந்த இயக்கத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும்
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தாய்க்கழகமான அதிமுகவுடன் இணைகிறது.
சேலம் பொதுக்கூட்டத்தின் போது மாதவனின் இயக்கம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையுடன் இணைக்கப்பட்டது.
தனக்குப்பின் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே அதிகமுகவுடன் இணைகிறோம்.

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைதேர்தல்களில் எங்கள் பேரவை அளித்த ஆதரவை அதிகமுக நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.
போயஸ் கார்டன் வீடு எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. சட்டரீதியாக சொத்தை மீட்பேன்.
சொத்தை மீட்டபின் ட்ரஸ்ட் ஆரம்பித்து மக்களுக்கு உதவுவேன்.

அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவுடனே இணைகிறோம்.
இன்று தான் கடிதம் கொடுத்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்..

tn_che_03_jdeepa_press_meet_byte_script_7204894



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.