ETV Bharat / state

கள்ளச்சாராய மரணங்கள்: மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு!

author img

By

Published : Jun 1, 2023, 10:54 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Liqour
கள்ளச்சாராயம்

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த மாதம் 13, 14ம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியை சேர்ந்த 8 பேரும் அடங்குவர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் செய்யூர் பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் மற்றும் பனையூரை சேர்ந்த அம்மாவாசையன், சந்துரு, வேலு, ராஜேஷ், நரேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், செங்கல்பட்டில் ஒருவர், மரக்காணத்தில் மூன்று பேர் என 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: IT Raids: ஓய்ந்த அலை மீண்டும் மோதுகிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த மாதம் 13, 14ம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயிரிழந்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியை சேர்ந்த 8 பேரும் அடங்குவர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் செய்யூர் பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஓதியூர் மற்றும் பனையூரை சேர்ந்த அம்மாவாசையன், சந்துரு, வேலு, ராஜேஷ், நரேஷ் குமார், விஜயகுமார் ஆகிய 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், செங்கல்பட்டில் ஒருவர், மரக்காணத்தில் மூன்று பேர் என 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: IT Raids: ஓய்ந்த அலை மீண்டும் மோதுகிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.