ETV Bharat / state

'மாணவியைப்போல 3 பேராசிரியர்களும் தற்கொலை செய்து கொள்வார்கள்' : மிரட்டல் விடுத்த நபர்! - Like the student, 3 professors commit suicide

சென்னை: ஐஐடி மாணவியின் தற்கொலைக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்கள் தாங்களாகவே தற்கொலை செய்து கொள்வார்கள் என்று குறிப்பிட்ட மிரட்டல் கடிதத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐஐடி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார்.

IIT STUDENT
IIT STUDENT
author img

By

Published : Dec 7, 2019, 12:07 AM IST

சென்னை ஐஐடியில் கடந்த மாதம் ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறப்பட்டாலும், அவரது செல்போனில் தனது மரணத்திற்குக் காரணம் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரா, மிலின் பிராமே என்று பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற பகீர் தகவலை அவரது தந்தை வெளியிட்டார். தற்போது இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐஐடி இயக்குநருக்கு மு.மு.க என்று குறிப்பிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் ஃபாத்திமா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்றும்; கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்களும் மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் போல், தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஐடி இயக்குநர், அந்த மிரட்டல் கடிதத்தை பதிவாளரிடம் கொடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செய்தார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தக் கடிதத்தை எழுதிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வனத்துறையில் முதல் 'திருநங்கை' : பணியில் சேர்ந்தார் ’தீப்தி’

சென்னை ஐஐடியில் கடந்த மாதம் ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறப்பட்டாலும், அவரது செல்போனில் தனது மரணத்திற்குக் காரணம் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரா, மிலின் பிராமே என்று பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற பகீர் தகவலை அவரது தந்தை வெளியிட்டார். தற்போது இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐஐடி இயக்குநருக்கு மு.மு.க என்று குறிப்பிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் ஃபாத்திமா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்றும்; கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்களும் மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் போல், தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஐடி இயக்குநர், அந்த மிரட்டல் கடிதத்தை பதிவாளரிடம் கொடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செய்தார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தக் கடிதத்தை எழுதிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வனத்துறையில் முதல் 'திருநங்கை' : பணியில் சேர்ந்தார் ’தீப்தி’

Intro:Body:ஐ ஐ டி மாணவியின் தற்கொலைக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட 3பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார் என ஐஐடி இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம்...


சென்னை ஐஐடியில் கடந்த மாதம் பாத்திமா லத்திப் என்ற மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் அவரது செல்போனில் எனது மரணத்திற்கு காரணம் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மனாபன், ஹேமசந்திரா மற்றும் மிலின் பிராமே என்று பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பான விசாரணையை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐஐடி இயக்குனருக்கு மு.மு.க என்று குறிப்பிட்டு மர்ம நபர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் பாத்திமா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு கொடுக்கவேண்டும் எனவும் கிடைக்கவில்லை எனில் சம்மந்தப்பட்ட 3 பேராசிரியர்கள் மாணவி தற்கொலை செய்து கொண்டதை போல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று ஐஐடி இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பி உள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர் இந்த கொலை மிரட்டல் கடிதத்தை பதிவாளரிடம் கொடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்தனர். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த கடிதத்தை எழுதிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.