ETV Bharat / state

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் தோல் வங்கி! - ஒரு சிறப்புப் பார்வை!

author img

By

Published : Dec 13, 2019, 8:52 PM IST

Updated : Dec 13, 2019, 9:05 PM IST

சென்னை: இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோலைப் பயன்படுத்தி தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்தார்.

kmc-medical-college-skin-bank
kmc-medical-college-skin-bank

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தோல் வங்கிக்குத் தேவையான தோலினை இறந்தவரின் உடலிலிருந்து பெறுகின்றனர். அதே போல் பல்வேறு பதப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தோலைத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கு ஐந்து ஆண்டுகள் வரைப் பயன்படுத்த முடியும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, 'கண் தானம் அளிக்கும் அனைவரும் தோலையும் தானமாக அளிக்க முடியும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இறந்தவர்கள் குறித்து விபரம் தெரிவித்தாலும், நாங்களே நேரில் வந்து தோலைப் பெற்றுக் கொள்வோம். கடந்த 2018ஆம் ஆண்டில் எட்டு பேர் தோல் தானம் அளித்தனர்.

அதனை தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு பயன்படுத்தி உள்ளோம். 2019ஆம் ஆண்டில் இதுவரை 14 நபர்கள் தோலை தானமாக அளித்துள்ளனர். அவற்றில் எட்டு நபர்களின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆறு நபர்களின் தோல்கள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் பத்து நபர்கள் வருகின்றனர்.

தோல் வங்கி குறித்து கூறும் கல்லூரி முதல்வர் வசந்தாமணி

ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அளவு தோல் தானமாகக் கிடைக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள தோலினை தானமாக அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்புப் பிரிவு உதவி பேராசிரியர் பிரசன்னா கூறும்போது, 'தீ விபத்துகளால் பாதிக்கப்படும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காயம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட பகுதியில், வேறு தோலை பொருத்தி சிகிச்சை அளிப்போம். அவ்வாறு சிகிச்சை அளிப்பதால் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமடைவார்கள்.

தோல் வங்கி குறித்து கூறும் உதவிப் பேராசிரியர் பிரசன்னா

இறந்தவரின் உடலிலிருந்து தோலைத் தானமாக அளிப்பதால், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவ முடியும். தோல் கொடுப்பான் தோழன் எனக் கூறுவார்கள். அதுபோல் இறந்தவரின் உடலில் உள்ள தோலில் 10 விழுக்காட்டினை அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:

சிதம்பரத்தைக் கைது செய்க' - காமராஜரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் புகார்

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தோல் வங்கிக்குத் தேவையான தோலினை இறந்தவரின் உடலிலிருந்து பெறுகின்றனர். அதே போல் பல்வேறு பதப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தோலைத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கு ஐந்து ஆண்டுகள் வரைப் பயன்படுத்த முடியும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, 'கண் தானம் அளிக்கும் அனைவரும் தோலையும் தானமாக அளிக்க முடியும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இறந்தவர்கள் குறித்து விபரம் தெரிவித்தாலும், நாங்களே நேரில் வந்து தோலைப் பெற்றுக் கொள்வோம். கடந்த 2018ஆம் ஆண்டில் எட்டு பேர் தோல் தானம் அளித்தனர்.

அதனை தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு பயன்படுத்தி உள்ளோம். 2019ஆம் ஆண்டில் இதுவரை 14 நபர்கள் தோலை தானமாக அளித்துள்ளனர். அவற்றில் எட்டு நபர்களின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆறு நபர்களின் தோல்கள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் பத்து நபர்கள் வருகின்றனர்.

தோல் வங்கி குறித்து கூறும் கல்லூரி முதல்வர் வசந்தாமணி

ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அளவு தோல் தானமாகக் கிடைக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள தோலினை தானமாக அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்புப் பிரிவு உதவி பேராசிரியர் பிரசன்னா கூறும்போது, 'தீ விபத்துகளால் பாதிக்கப்படும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காயம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட பகுதியில், வேறு தோலை பொருத்தி சிகிச்சை அளிப்போம். அவ்வாறு சிகிச்சை அளிப்பதால் நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமடைவார்கள்.

தோல் வங்கி குறித்து கூறும் உதவிப் பேராசிரியர் பிரசன்னா

இறந்தவரின் உடலிலிருந்து தோலைத் தானமாக அளிப்பதால், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவ முடியும். தோல் கொடுப்பான் தோழன் எனக் கூறுவார்கள். அதுபோல் இறந்தவரின் உடலில் உள்ள தோலில் 10 விழுக்காட்டினை அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:

சிதம்பரத்தைக் கைது செய்க' - காமராஜரோடு தன்னை ஒப்பிட்டுப் பேசியதால் புகார்

Intro:கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி



Body:கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி


சென்னை,

இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோலை பயன்படுத்தி தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்தார்.


சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தோல் வங்கிக்கு தேவையான தோலினை இறந்தவரின் உடலிலிருந்து பெறுகின்றனர். அந்த போல் பல்வேறு பதப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் தோலை தீயினால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைக்கு 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த தோல்வியானது தென்னிந்தியாவில் மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் மேல் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தோல் வங்கி 2018 ம் ஆண்டு துவக்கப்பட்டது. தென்மாநிலங்களில் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே தோல் வங்கி செயல்பட்டு வருகிறது.

மனிதர்கள் தொற்று நோய்கள் மற்றும் தோல் நோய்கள் இன்றி இருந்தால் அவர்களின் உடலில் இருந்து தோலை தானமாக பெற முடியும்.மனித உடலில் 1.8 சதுர மீட்டர் தோல் உள்ளது. அவற்றிலிருந்து 170 சென்டி மீட்டர் அளவிற்கு தோல் எடுக்கப்படும். அந்த தோறும் மனிதனின் தொடை உள்ளிட்ட கால் பகுதியில் மூன்று இடங்களில் எடுக்கப்படும். அதன் பின்னர் தோல் எடுத்த பகுதியில் சிகிச்சை செய்யப்படும்.
அதன் பின்னர் பெறப்பட்டத் தோல் வங்கிக்கு கொண்டுச் செல்லப்பட்டு பதப்படுத்தப்படும். அப்பொழுது தோலில் எந்தவித தோற்று நோய்கள் மற்றும் வைரஸ்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்துவோம். பதப்படுத்திய தோலினை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

கண் தானம் அளிக்கும் அனைவரும் தோல் தானமாக அளிக்க முடியும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தவர்கள் குறித்து விபரம் தெரிவித்தாலும் நாங்களே நேரில் வந்து தோலை பெற்றுக் கொள்வோம். கடந்த 2018-ஆம் ஆண்டில் 8 பேர் தோல் தானம் அளித்தனர். அதனை தீ காயத்தால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு பயன்படுத்தி உள்ளோம். 2019ம் ஆண்டில் இதுவரை 14 நபர்கள் தோலை தானமாக அளித்துள்ளனர். அவற்றில் 8 நபர்களின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.6 நபர்கள் தோல் பதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் பத்து நபர்கள் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அளவு தோல் தானமாக கிடைக்கவில்லை.

இறந்தவர்களின் உடல்களில் உள்ள தோலினை தானமாக அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு பிரிவு உதவி பேராசிரியர் பிரசன்னா கூறும்போது, தீ விபத்துகளால் பாதிக்கப்படும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ காயம் 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட பகுதியில் வேறு தோலை பொருத்தி சிகிச்சை அளிப்போம். அவ்வாறு சிகிச்சை அளிப்பதால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமடைவார்கள்.

இறந்தவரின் உடலிலிருந்து தோலை தானமாக அளிப்பதால் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உதவ முடியும். தோல் கொடுப்பான் தோழன் எனக் கூறுவார்கள். அதுபோல் இறந்தவரின் உடலில் உள்ள தோலில் 10 சதவீதம் அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.



Conclusion:
Last Updated : Dec 13, 2019, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.