ETV Bharat / state

வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான்: 2 மணி நேரம் நீடித்த விசாரணை!

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கல்கி பகவான், நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி இரண்டு மணி நேரமாக விளக்கமளித்தார்.

author img

By

Published : Nov 6, 2019, 7:41 PM IST

Updated : Nov 6, 2019, 8:45 PM IST

கல்கி பகவான்

அக்டோபர் மாதம் 16ஆம் தேதியில் தொடங்கி 6 நாட்கள் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் 44 கோடி ரூபாய் இந்திய பணம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு, ஆந்திராவில் 4000 ஏக்கர் அளவிற்கு நிலங்கள் வாங்கி விற்றதும் சோதனையில் தெரியவந்தது.

குறிப்பாக ஆசிரமத்திற்குவரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களிலும் விளையாட்டிலும் முதலீடு செய்து கல்கி பகவான் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்ததும் தெரியவந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து ஆசிரமத்திற்குவரும் பணக்காரர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையை குறைத்துக்காட்டி அந்தப் பணத்தை சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்து முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்கி பகவான் அவரது மனைவியின் பெயரில் அம்மா பகவான் என்ற ஆசிரமம் அமைத்து அதற்காக நிதி வசூலித்தாகவும், அவரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீத்தா ஆகியோர் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கிக் குவித்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கிருஷ்ணா, அவரது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் பெயரிலும் ரகசியமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் முறைகேடாக 85 கோடி ரூபாய் ஹவாலா மூலம் அந்நிய நாட்டில் பணபரிவர்த்தனை முதலீடு செய்ததற்காகவும், 20 கோடி ரூபாய் அமெரிக்கா டாலர் சிக்கியது குறித்தும் அமலாக்கத் துறையினர் அந்நிய மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கல்கி பகவான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக கல்கி பகவானின் கணக்காளரிடம் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக கல்கி பகவானையும், அவரது மகன் கிருஷ்ணாவையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இவற்றின் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் கல்கி பகவான் ஆஜராக வேண்டும் என அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்கு அவர் ஆஜரானார். இரண்டு மணி நேரம் கல்கி பகவான் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இந்நிகழ்வினை செய்தியாளர்கள் படம்பிடிக்க அலுவலர்கள் மறுத்துவிட்ட நிலையில், விசாரணை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கல்கி ஆசிரம சோதனை நிறைவு: ரூ.800 கோடி, 4000 ஏக்கர் நிலம்...! - வாயைப் பிளக்கும் பக்தர்கள்

அக்டோபர் மாதம் 16ஆம் தேதியில் தொடங்கி 6 நாட்கள் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் 44 கோடி ரூபாய் இந்திய பணம், 20 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தமிழ்நாடு, ஆந்திராவில் 4000 ஏக்கர் அளவிற்கு நிலங்கள் வாங்கி விற்றதும் சோதனையில் தெரியவந்தது.

குறிப்பாக ஆசிரமத்திற்குவரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களிலும் விளையாட்டிலும் முதலீடு செய்து கல்கி பகவான் கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்ததும் தெரியவந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து ஆசிரமத்திற்குவரும் பணக்காரர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையை குறைத்துக்காட்டி அந்தப் பணத்தை சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்து முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்கி பகவான் அவரது மனைவியின் பெயரில் அம்மா பகவான் என்ற ஆசிரமம் அமைத்து அதற்காக நிதி வசூலித்தாகவும், அவரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீத்தா ஆகியோர் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கிக் குவித்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கிருஷ்ணா, அவரது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் பெயரிலும் ரகசியமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் முறைகேடாக 85 கோடி ரூபாய் ஹவாலா மூலம் அந்நிய நாட்டில் பணபரிவர்த்தனை முதலீடு செய்ததற்காகவும், 20 கோடி ரூபாய் அமெரிக்கா டாலர் சிக்கியது குறித்தும் அமலாக்கத் துறையினர் அந்நிய மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கல்கி பகவான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக கல்கி பகவானின் கணக்காளரிடம் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக கல்கி பகவானையும், அவரது மகன் கிருஷ்ணாவையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இவற்றின் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் கல்கி பகவான் ஆஜராக வேண்டும் என அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்கு அவர் ஆஜரானார். இரண்டு மணி நேரம் கல்கி பகவான் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இந்நிகழ்வினை செய்தியாளர்கள் படம்பிடிக்க அலுவலர்கள் மறுத்துவிட்ட நிலையில், விசாரணை மேலும் தொடரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கல்கி ஆசிரம சோதனை நிறைவு: ரூ.800 கோடி, 4000 ஏக்கர் நிலம்...! - வாயைப் பிளக்கும் பக்தர்கள்

Intro:Body:

#BREAKING | சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் விசாரணைக்கு ஆஜர் * சென்னை, ஆந்திரா உட்பட கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெற்றது; சோதனையில் ரூ.43.90 கோடி, ரூ.18 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது | #kalkibhagwan


Conclusion:
Last Updated : Nov 6, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.