ETV Bharat / state

பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு! - நிறுவனத்தின் 8 வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை: அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெனிதா ஜீலியஸ்
author img

By

Published : Sep 20, 2019, 7:52 AM IST

திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ் என்ற பெண், சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் நேர்காணல் சென்றார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் நாள் பணியில் சேர்ந்தார். இவர் இரவுப் பணியில் இருக்கும் பொழுது ஐடி நிறுவனத்தின் 8 வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ணியில் சேர்ந்த முதல் நாளிலேயே ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு

இதற்கிடையே, நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட தகவலை வைத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் திருச்சியில் உள்ள பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து, அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே இளம் பெண் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ் என்ற பெண், சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் நேர்காணல் சென்றார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் நாள் பணியில் சேர்ந்தார். இவர் இரவுப் பணியில் இருக்கும் பொழுது ஐடி நிறுவனத்தின் 8 வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ணியில் சேர்ந்த முதல் நாளிலேயே ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு

இதற்கிடையே, நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட தகவலை வைத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் திருச்சியில் உள்ள பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து, அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே இளம் பெண் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:அம்பத்தூரில் பெண் ஐ டி ஊழியர் ஒருவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலே ஐ டி நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுBody:அம்பத்தூரில் பெண் ஐ டி ஊழியர் ஒருவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலே ஐ டி நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் பணிப்புரிந்து வந்த திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ்/24என்ற பெண் ஊழியர்.இவர் இன்று இரவு பணியில் இருக்கும் பொழுது 8 வது மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்தார். அந்த தனியார் நிறுவனத்தில் நேற்று பணிக்காக தேர்வு செய்யப்பட்டு இன்று பணியில் சேர்ந்த நிலையில் ,தாம் பணிபுரியும் ஐடி வளாகத்தின் 8 வது மாடியில் இருந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கீழே விழுந்து உயிர் இழந்த அவரின்  உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலிசார் திருச்சியில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும்  அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற பல்வேறு கோணத்திலும் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பணியில் சேர்ந்த முதல் நாளில் இளம் பெண் ஒருவர் கீழே விழுந்து பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.