சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உதவி மற்றும் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பம் செய்வது முதல் , கல்லூரியில் சேர்வது வரையிலும் தேவையான தகவல்களை பெற முடியும். மேலும் மாணவர்களுக்கு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களிலும் உதவி மற்றும் தகவல் சேகரிப்பு மையத்தின் எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவகத்தில் புதியதாக உதவி மற்றும் தகவல் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர உள்ளவர்கள் தொடர்புக் கொண்டு தகவல்களை தெரிந்துக் கொள்வதற்கு வசதியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் கல்வியாண்டில் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8 ந் தேதி காலை முதல் துவங்கியது. இதில் 19 ந் தேதி வரையில் பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 ம் சேர்த்து ரூ.50 செலுத்த வேண்டும். கலை மற்றும் அறிவியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் 1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணபித்துள்ளனர்.
அவர்களில் 52 ஆயிரத்து 414 மாணவர்களும், 66,283 மாணவிகளும், 40 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. அவர்களில் பிகாம் (பொது) பிகாம் (சிஏ), பிஎஸ்சி கம்ப்யூடட்ர் சயின்ஸ் ஆகியப் பாடங்களில் சேருவதற்கு அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர். 2022-23 ம் கல்வியாண்டில் சேர்வதற்கு 2 லட்சத்து 98 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த நிலையில் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவ வசதி மையத்தின் பேனரில் செல்பாேன் எண் எழுதப்பட்டிருக்கும்.
மாணவர்கள் சேர்க்கையில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இந்த மையத்தின் மூலம் மாணவர்கள் சேர்க்கை விபரம், 2023-24 ம் கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்ந்த விபரம், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிலம் சார்ந்த விபரங்கள், கல்வி உதவித் தொகை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் இன ஒதுக்கீடு மற்றும் பணியாற்றும் விபரங்கள்,
காலிப்பணியிடங்கள் விபரம், புதுமைப்பெண் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் விபரம், நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் விபரம் , ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விபரம், கல்விப்பணி தொடர்பாக வெளியாகி உள்ள அரசாணைகளின் தொகுப்பு உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க உள்ளனர். இந்த மையத்தினை தொடர்பு கொண்டு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவிகளை பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; பரமேஷ்வரை முதலமைச்சர் ஆக்கக்கோரி ஆதரவாளர்கள் போராட்டம்