ETV Bharat / state

சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல்: 6 பேர் கைது

author img

By

Published : Jan 9, 2021, 9:28 PM IST

சென்னை: சிறப்பு விமானத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயன்ற ஆறு பேரை சுங்கத் துறையினர் கைதுசெய்து பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ஹவாலா பணம்
hawala money seized in chennai airport by customs six held

சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்யவந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது சென்னை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த மன்சூா் அலிகான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (48), முகமது உசேன் (30), யூசுப் (67), அப்துல் ரகுமான் (38) ஆகிய ஆறு போ் ஒரு குழுவாகச் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தனா். அவா்கள் மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவா்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா்.

இதனால் அவா்களைத் தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்த அமெரிக்க டாலா், சவுதி ரியால் கரன்சிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனா். அத்தோடு அவா்களின் கைப்பைகளிலும் கரன்சிகள் இருந்தன. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கரன்சிகள் அனைத்தையும் சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.

hawala money seized in chennai airport by customs six held
கடத்த முயன்ற ஹவாலா பணம்

இதையடுத்து ஆறு பேரின் பயணத்தையும் ரத்துசெய்து அவா்களைக் கைதுசெய்தனா். விசாரணையில் அவர்களிடமிருந்தது கணக்கில் வராத ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

இந்தப் பணத்தை அவா்களிடம் கொடுத்தனுப்பியது யாா் எனவும் துபாயில் யாரிடம் கொடுக்க எடுத்துச் செல்ல முயன்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க...18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: போலீசிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட புகாரளித்தவர்!

சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்யவந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.

அப்போது சென்னை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த மன்சூா் அலிகான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (48), முகமது உசேன் (30), யூசுப் (67), அப்துல் ரகுமான் (38) ஆகிய ஆறு போ் ஒரு குழுவாகச் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தனா். அவா்கள் மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவா்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா்.

இதனால் அவா்களைத் தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்த அமெரிக்க டாலா், சவுதி ரியால் கரன்சிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனா். அத்தோடு அவா்களின் கைப்பைகளிலும் கரன்சிகள் இருந்தன. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கரன்சிகள் அனைத்தையும் சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.

hawala money seized in chennai airport by customs six held
கடத்த முயன்ற ஹவாலா பணம்

இதையடுத்து ஆறு பேரின் பயணத்தையும் ரத்துசெய்து அவா்களைக் கைதுசெய்தனா். விசாரணையில் அவர்களிடமிருந்தது கணக்கில் வராத ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

இந்தப் பணத்தை அவா்களிடம் கொடுத்தனுப்பியது யாா் எனவும் துபாயில் யாரிடம் கொடுக்க எடுத்துச் செல்ல முயன்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க...18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: போலீசிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட புகாரளித்தவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.