ETV Bharat / state

ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !

author img

By

Published : May 6, 2020, 1:04 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள 144 உத்தரவு காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும்
ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும்

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டும், 33 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் பரவிவரும் இதனை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மே17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கட்டுபாடுகளுடன் சில நிறுவனங்களை இயக்க தளர்வு அளிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவு காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என விரிவாக அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு வரை கீழ்காணும் வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT& ITes) : 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITes) : 50 % பணியாளர்களை மட்டுமே கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பணியிடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் கை கழுவுதல், காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும்.
  • பணியாளர்களுக்கு 1 மருத்துவர் என உறுதி செய்தல் வேண்டும்.
  • அறைகளில் 1 மீட்டர் இடைவெளியில் பெட் போன்ற தூங்கு வசதி உபகரணங்களை அமைத்தல் வேண்டும்.
  • கிருமிநாசினியினை இருமுறை தெளித்தல் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிரிமிநாசினியை வைத்திருத்தல் வேண்டும்.
  • இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்தல் வேண்டும். பணி நேர மாற்றம் (Shift) போது ஒரு Shift க்கும் அடுத்த Shiftக்கும் இடையில் பணியாளர்கள் ஒன்று சேர்வதை தவிர்க்கும் வகையில் 30 நிமிட இடைவெளி இருக்குமாறு பணிநேரத்தை அமைத்தல் வேண்டும்.
  • 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஏற்பாடு செய்தல் வேண்டும்.
  • பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கோவிட்-19 வைரஸ் தொற்றினை சரிசெய்யும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் விவரங்களை பணியாளர்களுக்கு தெரியும் வகையில் வைத்திருத்தல் வேண்டும்.
  • நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், சுவாசம் தொடர்பான நோய்களுக்கு முகாம்களை நடத்தி கண்டறிதல் அவசியம்.
  • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு உறுதிசெய்தல் அவசியம்.
  • பொதுவாக கோவிட் 19 வைரஸ் தொற்றினை மேலும் பரவாமல் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல் வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கைகளை கழுவுதல், சுவாசப் பயிற்சி, சமூக இடைவெளி, சுற்றுப்புற சுகாதார நடத்தை சுய பாதுகாப்பு ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் வேண்டும்.
  • 200 முதல் 1000 பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மருத்துவர் ஆய்வு செய்தல் வேண்டும்.
  • 1000 பணியாளர்களுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் ஒவ்வொரு நாளும் மருத்துவர் வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • வெளியிலிருந்து வரும் அலுவலக பணியாளர்களுக்கு வாகன போக்குவரத்து வசதியினை நிறுவனம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
  • வாகனத்தில் 50 % அளவிற்கு மட்டுமே பணியாளர்கள் அனுமதித்தல் Gausior Qb. (Full capacity not allowed) கார் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களில் ஓட்டுநர் தவிர இருவரை மட்டுமே அனுமதித்தல் வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
  • அலுவலகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைகழுவும் கிருமிநாசினியை கொண்டு அடிக்கடி தாய்மை படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
  • பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமிநாசினியினை தெளித்து தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
  • அலுவலகத்தின் நுழைவுவாயில், உணவு அருந்துமிடம், வெளியே செல்லும் வழி, கூட்டரங்கம், திறந்வெளி, அலுவலர்கள் அறைகள், உபகரணங்கள் மற்றும் மின் தூக்கி, கை அலம்பும் இடம், கழிப்பறை, குடிநீர் அருந்தும் இடம், சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் வேண்டும்.
  • அலுவலக கட்டடத்தில் பணியாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சுவர்கள் ஆகியவற்றை இருமுறை கிருமி நாசினி தெளித்து துடைக்க வேண்டும்.
  • அலுவலக தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம் வழங்க வேண்டும்.
  • பணியாளர்களுக்கு Infra Red தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை கண்டறிய வேண்டும்.
  • சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் ஆகிய மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும் அனைத்து அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
  • நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா மூலம் நோய் பரவலை (Tracking contacts) கண்காணித்தல் வேண்டும். தேவையற்ற பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
  • உணவு அருந்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் ஒருமுறை பயன்படும் தட்டுகளை உபயோகப்படுத்துதல் வேண்டும்.
  • மின் தூக்கிகளில் அதிகபட்சமாக 2 முதல் 4 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • கூடிய வரையில் படிக்கட்டுகளை பயன்படுத்த அறிவுரை வழங்குதல் வேண்டும்.

என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் தாக்கம் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டும், 33 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் பரவிவரும் இதனை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு மே17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கட்டுபாடுகளுடன் சில நிறுவனங்களை இயக்க தளர்வு அளிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவு காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என விரிவாக அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு வரை கீழ்காணும் வழிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT& ITes) : 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.
  • நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (Except Containment Zones) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITes) : 50 % பணியாளர்களை மட்டுமே கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பணியிடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் கை கழுவுதல், காய்ச்சல் பரிசோதனை, கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும்.
  • பணியாளர்களுக்கு 1 மருத்துவர் என உறுதி செய்தல் வேண்டும்.
  • அறைகளில் 1 மீட்டர் இடைவெளியில் பெட் போன்ற தூங்கு வசதி உபகரணங்களை அமைத்தல் வேண்டும்.
  • கிருமிநாசினியினை இருமுறை தெளித்தல் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிரிமிநாசினியை வைத்திருத்தல் வேண்டும்.
  • இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்தல் வேண்டும். பணி நேர மாற்றம் (Shift) போது ஒரு Shift க்கும் அடுத்த Shiftக்கும் இடையில் பணியாளர்கள் ஒன்று சேர்வதை தவிர்க்கும் வகையில் 30 நிமிட இடைவெளி இருக்குமாறு பணிநேரத்தை அமைத்தல் வேண்டும்.
  • 55 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற ஏற்பாடு செய்தல் வேண்டும்.
  • பணியாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கோவிட்-19 வைரஸ் தொற்றினை சரிசெய்யும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் விவரங்களை பணியாளர்களுக்கு தெரியும் வகையில் வைத்திருத்தல் வேண்டும்.
  • நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், சுவாசம் தொடர்பான நோய்களுக்கு முகாம்களை நடத்தி கண்டறிதல் அவசியம்.
  • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு உறுதிசெய்தல் அவசியம்.
  • பொதுவாக கோவிட் 19 வைரஸ் தொற்றினை மேலும் பரவாமல் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல் வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கைகளை கழுவுதல், சுவாசப் பயிற்சி, சமூக இடைவெளி, சுற்றுப்புற சுகாதார நடத்தை சுய பாதுகாப்பு ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் வேண்டும்.
  • 200 முதல் 1000 பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மருத்துவர் ஆய்வு செய்தல் வேண்டும்.
  • 1000 பணியாளர்களுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் ஒவ்வொரு நாளும் மருத்துவர் வருவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • வெளியிலிருந்து வரும் அலுவலக பணியாளர்களுக்கு வாகன போக்குவரத்து வசதியினை நிறுவனம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
  • வாகனத்தில் 50 % அளவிற்கு மட்டுமே பணியாளர்கள் அனுமதித்தல் Gausior Qb. (Full capacity not allowed) கார் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களில் ஓட்டுநர் தவிர இருவரை மட்டுமே அனுமதித்தல் வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
  • அலுவலகத்தில் நுழையும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைகழுவும் கிருமிநாசினியை கொண்டு அடிக்கடி தாய்மை படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
  • பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமிநாசினியினை தெளித்து தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
  • அலுவலகத்தின் நுழைவுவாயில், உணவு அருந்துமிடம், வெளியே செல்லும் வழி, கூட்டரங்கம், திறந்வெளி, அலுவலர்கள் அறைகள், உபகரணங்கள் மற்றும் மின் தூக்கி, கை அலம்பும் இடம், கழிப்பறை, குடிநீர் அருந்தும் இடம், சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் வேண்டும்.
  • அலுவலக கட்டடத்தில் பணியாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் சுவர்கள் ஆகியவற்றை இருமுறை கிருமி நாசினி தெளித்து துடைக்க வேண்டும்.
  • அலுவலக தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம் வழங்க வேண்டும்.
  • பணியாளர்களுக்கு Infra Red தெர்மா மீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை கண்டறிய வேண்டும்.
  • சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்தல் ஆகிய மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும் அனைத்து அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
  • நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா மூலம் நோய் பரவலை (Tracking contacts) கண்காணித்தல் வேண்டும். தேவையற்ற பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
  • உணவு அருந்தும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் ஒருமுறை பயன்படும் தட்டுகளை உபயோகப்படுத்துதல் வேண்டும்.
  • மின் தூக்கிகளில் அதிகபட்சமாக 2 முதல் 4 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • கூடிய வரையில் படிக்கட்டுகளை பயன்படுத்த அறிவுரை வழங்குதல் வேண்டும்.

என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.