ETV Bharat / state

சென்னையில் நடந்த வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 2, 2020, 9:03 AM IST

சென்னை: புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு 27 இடங்களில் நடந்த வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

new year celebration  four died in chennai road accident  chennai district news  சாலை விபத்து  புத்தாண்டு கொண்டாட்ட இரவில் நான்கு பேர் வாகன விபத்தில் பலி
சென்னையில் நேற்று நள்ளிரவில் நடந்த வாகன விபத்துகள்: 4 பேர் உயிரிழப்பு

சென்னை தாம்பரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் தங்கவேலு (20) என்பவர் உயிரிழந்தார். அதேபோன்று புழல் சிறைச்சாலை அருகே செங்குன்றத்திலிருந்து வந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார்.

எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி சுந்தர் என்பவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் சுந்தர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பேரூரை அடுத்த குமணன்சாவடி அருகே ஆட்டோ மோதி முகமது என்பவர் உயிரிழந்தார்.

சாந்தோம் பேராலயம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஒரு பெண், அவருடைய குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். தற்போது, இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆட்டோ மோதி காயமடைந்த எழும்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். இதுபோன்ற சிறு சிறு விபத்துகள் ஆங்காங்கே நடந்துள்ளன.

இதையும் படிங்க: 51 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது

சென்னை தாம்பரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் தங்கவேலு (20) என்பவர் உயிரிழந்தார். அதேபோன்று புழல் சிறைச்சாலை அருகே செங்குன்றத்திலிருந்து வந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார்.

எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி சுந்தர் என்பவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் சுந்தர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பேரூரை அடுத்த குமணன்சாவடி அருகே ஆட்டோ மோதி முகமது என்பவர் உயிரிழந்தார்.

சாந்தோம் பேராலயம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஒரு பெண், அவருடைய குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். தற்போது, இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆட்டோ மோதி காயமடைந்த எழும்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். இதுபோன்ற சிறு சிறு விபத்துகள் ஆங்காங்கே நடந்துள்ளன.

இதையும் படிங்க: 51 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது

Intro:Body:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் 27 இடங்களில் வாகன விபத்து. 4 பேர் உயிரிழப்பு...

சென்னையில் பல்வேறு இடங்களில் வாகன விபத்துக்களில் ஏற்பட்டு 4 பேர் உயிரிழப்பு. சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது...

சென்னை தாம்பரத்தில் நின்று இருந்த பேருந்து மீது பைக் மோதி கல்லூரி மாணவர் தங்கவேலு (வயது 20) என்பவர் உயிரிழிந்தார். அதேபோன்று புழல் சிறைச்சாலை அருகே செங்குன்றத்தில் இருந்து வந்த வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் லாரி மோதி உயிரிழப்பு..

எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி சுந்தர் என்பவரது இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு. சென்னை போரூரை அடுத்த குமணன் சாவடி அருகே ஆட்டோ மோதி முகமது என்பவர் உயிரிழப்பு...

சென்னை சாந்தோம் பேராலயம் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் மற்றும் குழந்தையோடு படு காயம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி சென்னை எழும்பூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா மீது ஆட்டோ மோதி காயம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி...

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தரமணி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ் மீது இருசக்கர வாகனம் மோதி சிகிச்சை. இதுபோன்று சிறு சிறு விபத்துக்கள் ஆங்காங்கே நடந்துள்ளது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.