ETV Bharat / state

மது போதையால் 2மாத பெண் குழந்தையை கொலை செய்த தந்தை!

author img

By

Published : Oct 31, 2019, 10:12 PM IST

சென்னை: மது போதையால் விபரீதம் பிறந்து இரண்டு மாதமே ஆன பெண்குழந்தை அடித்து கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

baby murderd

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (27). இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி துர்கா இவர்களுக்கு ராஜமாதா என்ற இரண்டு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு எல்லப்பன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, அவர் மனைவி துர்காவுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால் துர்கா எல்லப்பனை விட்டு விலகிச் சென்று குழந்தைக்குபால் கொடுத்து கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில், குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ellappan is the father who killed the child
குழந்தையைக் கொலை செய்த தந்தை எல்லப்பன்

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு மாத குழந்தையை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை!

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (27). இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி துர்கா இவர்களுக்கு ராஜமாதா என்ற இரண்டு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு எல்லப்பன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, அவர் மனைவி துர்காவுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதால் துர்கா எல்லப்பனை விட்டு விலகிச் சென்று குழந்தைக்குபால் கொடுத்து கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில், குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ellappan is the father who killed the child
குழந்தையைக் கொலை செய்த தந்தை எல்லப்பன்

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு மாத குழந்தையை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை!

Intro:Body:எம்ஜிஆர் நகரில் 2 மாத குழந்தையை அடித்து கொன்ற தந்தை


அசோக் நகர் அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் வயது 27.இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி துர்கா இவர்களுக்கு 2 1/2 மாதமான ராஜமாதா என்கிற பெண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன் மனைவி துர்காவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.அப்போது குழந்தை அழுததால் துர்கா கணவரிடம் இருந்து விலகி சென்று தனது குழந்தையை தூக்கி மடியில் வைத்து பால் கொடுத்து கொண்டு இருந்தார்.

மனைவி விலகி சென்றதால் ஆத்திரமடைந்த எல்லப்பன் மனைவி மடியில் இருந்த குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தார்..இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலிசார் எல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

2 மாத குழந்தையை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லப்பனுக்கு துர்கா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.