ETV Bharat / state

'ஃபாத்திமா லத்தீப் சமூகத்தின் அறிவாளி' - வழக்கறிஞர் அருள்மொழி

author img

By

Published : Nov 19, 2019, 8:55 AM IST

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் சமூகத்தின் அறிவாளி என வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

dyfi-protest-arulmozhi

சென்னையில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரசார செயலர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டில் எல்லோருமே நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். சைக்கிள் ஸ்கூட்டர் மோதிக்கொண்டால் அதிகபட்சம் அடிதடியில் முடிவது வழக்கம். ஆனால், தற்போது சைக்கிளில் வராதவர் யார்? ஸ்கூட்டரில் வந்தவர் யார் என்றும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படிதான், ஒரு சைக்கிள் ஸ்கூட்டர் சண்டை ஒரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக மாற்றப்படுகிறது.

பக்குவப்பட்ட மாநிலத்தில் வேற்று மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கிறது. அந்த பெண்ணின் தாயார் உனக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார்கள். ஃபாத்திமா என்கிற என் பெயரே பிரச்னைதான்மா என்று சொல்கிறார். ஐடி நிறுவனங்களில் கம்யூனிட்டி சான்றிதழ் கேட்கிறார்கள். அதைவைத்து இன்போசிஸில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா?.


ஐஐடி பல வருட காலமாக இருக்கின்றது. ஆனால், இந்த நிறுவன படுகொலை, இடஒதுக்கீடு என்பது கட்டாயப்படுத்தப்படும்போது தான் ஆரம்பிக்கிறது. நீ கட்டாயமாக உள்ள வருவீயா, உன்னை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும் என்பதே இந்த துன்புறுத்தல்கள். இதனால் பெற்றோர்களின் மனநிலை எப்படி மாறும். ஐஐடி எல்லாம் வேண்டாம்பா, நமக்கு ஐடிஐயையே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.


இறந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஃபாத்திமா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தேர்வானவர். இஸ்லாமிய பெண்கள் சாதாரண பெண்களைவிட பல சவால்களை கடந்துதான் படிக்க வருகின்றனர். அப்படி வருகின்றவர்கள், போகின்ற போக்கில் தற்கொலை செய்து கொள்வார்களா?

நீங்கள் போட்ட மதிப்பெண் தவறாக இருக்கிறது என்று பேராசிரியருக்கு ஈமெயில் அனுப்புகிறார். பின் மதிப்பெண் சரியாக இருக்கிறது என்பதை அறிகிறாள். ஆனால், தவறாக மெயில் அனுப்பிவிட்டோமே, இவரை எப்படிச் சந்திப்பது. இவர் சும்மாவே நம்மை துன்புறுத்துவாரே என்று ஒரு பேராசிரியரை சந்திக்காமல் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அந்த பேராசிரியர் எப்படிப்பட்ட கொடூரமான ஒருவராக இருப்பார்.

வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில்...

ரோஹித் வெமுலா, ஃபாத்திமா லத்தீப் போன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த சமூகத்தின் அறிவாளிகள்' என்றார்.

இதையும் படிங்க:

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஜெர்மனி ஒத்துழைக்கும் - காரின் ஸ்டோல்

சென்னையில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரசார செயலர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டில் எல்லோருமே நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். சைக்கிள் ஸ்கூட்டர் மோதிக்கொண்டால் அதிகபட்சம் அடிதடியில் முடிவது வழக்கம். ஆனால், தற்போது சைக்கிளில் வராதவர் யார்? ஸ்கூட்டரில் வந்தவர் யார் என்றும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படிதான், ஒரு சைக்கிள் ஸ்கூட்டர் சண்டை ஒரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக மாற்றப்படுகிறது.

பக்குவப்பட்ட மாநிலத்தில் வேற்று மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கிறது. அந்த பெண்ணின் தாயார் உனக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார்கள். ஃபாத்திமா என்கிற என் பெயரே பிரச்னைதான்மா என்று சொல்கிறார். ஐடி நிறுவனங்களில் கம்யூனிட்டி சான்றிதழ் கேட்கிறார்கள். அதைவைத்து இன்போசிஸில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா?.


ஐஐடி பல வருட காலமாக இருக்கின்றது. ஆனால், இந்த நிறுவன படுகொலை, இடஒதுக்கீடு என்பது கட்டாயப்படுத்தப்படும்போது தான் ஆரம்பிக்கிறது. நீ கட்டாயமாக உள்ள வருவீயா, உன்னை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும் என்பதே இந்த துன்புறுத்தல்கள். இதனால் பெற்றோர்களின் மனநிலை எப்படி மாறும். ஐஐடி எல்லாம் வேண்டாம்பா, நமக்கு ஐடிஐயையே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.


இறந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. ஃபாத்திமா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தேர்வானவர். இஸ்லாமிய பெண்கள் சாதாரண பெண்களைவிட பல சவால்களை கடந்துதான் படிக்க வருகின்றனர். அப்படி வருகின்றவர்கள், போகின்ற போக்கில் தற்கொலை செய்து கொள்வார்களா?

நீங்கள் போட்ட மதிப்பெண் தவறாக இருக்கிறது என்று பேராசிரியருக்கு ஈமெயில் அனுப்புகிறார். பின் மதிப்பெண் சரியாக இருக்கிறது என்பதை அறிகிறாள். ஆனால், தவறாக மெயில் அனுப்பிவிட்டோமே, இவரை எப்படிச் சந்திப்பது. இவர் சும்மாவே நம்மை துன்புறுத்துவாரே என்று ஒரு பேராசிரியரை சந்திக்காமல் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அந்த பேராசிரியர் எப்படிப்பட்ட கொடூரமான ஒருவராக இருப்பார்.

வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில்...

ரோஹித் வெமுலா, ஃபாத்திமா லத்தீப் போன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த சமூகத்தின் அறிவாளிகள்' என்றார்.

இதையும் படிங்க:

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஜெர்மனி ஒத்துழைக்கும் - காரின் ஸ்டோல்

Intro:Body:சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாத்திமாவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், " நாட்டில் எல்லோருமே ஒரு மாதிரியான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். சைக்கிள் ஸ்கூட்டர் மோதிக்கொண்டால் அதிகபட்சம் அடிதடியில் முடிவது வழக்கம். ஆனால் தற்போது சைக்கிளில் வதவர் யார் ஸ்கூட்டரில் வந்தவர் யார் என்றும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படிதான் ஒரு சைக்கிள் ஸ்கூட்டர் சண்டை ஒரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சாதி சண்டைக்கு அடித்தளமாக மாற்றப்படுகிறது.

பக்குவப்பட்ட மாநிலத்தில் வேற்று மாநிலத்தை சார்ந்த ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கிறது. அந்த பெண்ணின் தாயார் உனக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார்கள் பாத்திமா என்கிற என் பெயரே பிரச்னைதான்மா என்று சொல்கிறார்.

ஐடி நிறுவனங்களில் கம்யூனிட்டி சான்றிதழ் கேட்கிறார்கள். அதைவைத்து இன்போசிஸ்ல இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா அல்லது காக்னிசன்ட்டில் கன்சஷன் கொடுக்கப்படுகிறதா.

தூக்கத்தை துளைக்கும் சாதியை கையிலெடுப்பவர்கள் பேராசிரியர்கள். அப்படிப்பட்ட பேராசிரியர்கள் குவிந்து கிடக்கின்ற இடம்தான் ஐஐடி, எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள்.

ஐஐடி பல வருட காலமாக இருக்கின்றது. ஆனால் இந்த நிறுவன படுகொலை இடஒதுக்கீடு என்பது கட்டாயப்படுத்தப்படும் போதுதான் எப்போது ஆரம்பிக்கிறது. நீ கட்டாயமாக உள்ள வருவியா உன்னை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும் என்பதே இந்த துன்புறுத்தல்கள். இதனால் பெற்றோர்களின் மனநிலை எப்படி மாறும். ஐஐடி எல்லாம் வேண்டாம்பா நமக்கு ஐடிஐயே போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கிற ஒரு மாணவர் குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்த்துக்கு வேலை செய்ய வேண்டும் என்று கையெழுத்து போட்டு வேலை பார்க்கின்றனர். ஆனால் இத்தானிரம் கோடி எங்கள் வரிப்பணத்தை செலவு செய்து ஐஐடி யில் படிப்பவர்களுக்கு நிபந்தனைகள் ஏதுமில்லை. அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். அதனால் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பதுதானே காரணம்.

செத்தவர்கள் எல்லாம் சாதரணமானவர்கள் அல்ல. பாத்திமா அகில இந்தியளவில் இரண்டாவது இடத்தில் தேர்வானவர். ஒரு இசுலாமிய பெண் சாதரண பெண்களைவிட பல சவால்களை கடந்துதான் படிக்க வருகின்றனர். அப்படி வருகின்றவர்கள் போகின்ற போக்கில் தற்கொலை செய்து கொள்வார்களா.

நீங்கள் போட்ட மதிப்பெண் தவறாக இருக்கிறது என்று பேராசிரியருக்கு ஈமெயில் அனுப்புகிறார் பின் மதிப்பெண் சரியாக இருக்கிறது என்பதை அறிகிறாள். ஆனால் தவறாக மெயில் அனுப்பிவிட்டோமே இவரை எப்படி சந்திப்பது இவர் சும்மாவே நம்மை துன்புறுத்துவாரே என்று ஒரு பேராசிராயரை சந்திக்க தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அந்த பேராசிராயர் எப்படிப்பட்ட கொடுரமான ஒருவராக இருப்பார்.

ஐஐடி க்குள் நாம் யாரும் நுழையமுடியாது. அதற்கு அதிகப்படியான அதிகாரம் அளிக்கப்படுகிறது. அதை மற்றவர்கள் பங்குபோட வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ரோஹித் வெமுலா, பாத்திமா லத்தீப் போன்றவர்கள் சாதரணமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த சமுகத்தின் அறிவாளிகள். அவர்கள் பாடச்சுமையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் அதனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மன அழுத்தத்தை தருகிறது என்றால் அந்த கல்வி முறை கோளாறாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

இது உரிய காலம் அல்ல. இதுவே தாமதம்தான். இது தனிமனித இழப்பு அல்ல. இது சமுகத்தின் இழப்பு.

ஐந்தாம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய ஒரு சைக்கோ கில்லரைவிட மோசமானவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் நம் நாடு நம் குழந்தை மாட்டிக்கொண்டுள்ளது. அவர்களை மீட்க நாம் போராடுவோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.