ETV Bharat / state

இட ஒதுக்கீட்டு மசோதா: மாணவர்கள் நலனை காவு கொடுக்கப்போகிறாரா முதலமைச்சர்- ஸ்டாலின் சாடல்

author img

By

Published : Oct 27, 2020, 3:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறாமல், மாணவர்கள் நலனை காவு கொடுக்கப் பேகிறாரா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

dmk leader questioned tn cm for 7.5 percent horizontal reservation
dmk leader questioned tn cm for 7.5 percent horizontal reservation

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநர், மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் மயான அமைதி காத்துவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான திமுக உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதலமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.

dmk leader questioned tn cm for 7.5 percent horizontal reservation
ஸ்டாலின் பதிவு

கவுன்சிலிங் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து நீட் தேர்வை, 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு மசோதாவையும் முதலமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா?

பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதலமைச்சர்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநர், மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் மயான அமைதி காத்துவருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான திமுக உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதலமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்.

dmk leader questioned tn cm for 7.5 percent horizontal reservation
ஸ்டாலின் பதிவு

கவுன்சிலிங் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து நீட் தேர்வை, 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு மசோதாவையும் முதலமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா?

பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதலமைச்சர்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.