ETV Bharat / state

High Court: ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

author img

By

Published : Apr 22, 2023, 3:11 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது? - உயர் நீதிமன்றத்தில் மனு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது? - உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அதற்கான உரிய கணக்குகளை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும், இன்னும் தாக்கல் செய்யவில்லை. நட்சத்திரப் பேச்சாளர் அனுமதி பெறும் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளருக்கே வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர்.

இது விதி மீறல். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது விதிமீறல் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டது.

வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதால், அந்த செய்தியை சேகரித்த குழுவினர் மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில், அவற்றைத் தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பதாலும், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என்பதால், பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: ஏப்.26ஆம் தேதி டெல்லிக்கு செல்லும் ஈபிஎஸ்.. அடுத்த திட்டம் என்ன?

சென்னை: கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அதற்கான உரிய கணக்குகளை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும், இன்னும் தாக்கல் செய்யவில்லை. நட்சத்திரப் பேச்சாளர் அனுமதி பெறும் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளருக்கே வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர்.

இது விதி மீறல். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது விதிமீறல் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்க வைக்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டது.

வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதால், அந்த செய்தியை சேகரித்த குழுவினர் மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் காயம் அடைந்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில், அவற்றைத் தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை என்பதாலும், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என்பதால், பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: ஏப்.26ஆம் தேதி டெல்லிக்கு செல்லும் ஈபிஎஸ்.. அடுத்த திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.