ETV Bharat / state

சென்னையில் 700ஐ தாண்டிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

author img

By

Published : May 16, 2020, 5:32 PM IST

சென்னை: மாநகராட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

containment zone in chennai
containment zone in chennai

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடு இருக்கும் தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து, தடுப்புகள் அமைத்து மூடியுள்ளது.

அதன்படி மாநகரில் இதுவரை 701 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மண்டல வாரியாக அதன் விவரம் பின்வருமாறு:

  • ராயபுரம் - 116 பகுதிகள்
  • திரு.வி.க. நகர் - 119 பகுதிகள்
  • வளசரவாக்கம் - 35 பகுதிகள்
  • தண்டையார்பேட்டை - 39 பகுதிகள்
  • தேனாம்பேட்டை - 65 பகுதிகள்
  • அம்பத்தூர் - 54 பகுதிகள்
  • கோடம்பாக்கம் - 59 பகுதிகள்
  • திருவொற்றியூர் - 34 பகுதிகள்
  • அடையாறு - 19 பகுதிகள்
  • அண்ணா நகர் - 30 பகுதிகள்
  • மாதவரம் - 50 பகுதிகள்
  • மணலி - 43 பகுதிகள்
  • சோழிங்கநல்லூர் - 15 பகுதிகள்
  • பெருங்குடி - 13 பகுதிகள்
  • ஆலந்தூர் - 10 பகுதிகள்

தொடர்ந்து 28 நாள்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இல்லை என்றால், அப்பகுதிக்கு தளர்வு அறிவிக்கப்படும். அதன்படி இன்று மொத்தம் 33 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாநகராட்சி நீக்கியுள்ளது.

இதையும் படிங்க: 10 நாள்களில் கரோனாவை குறைப்பதே இலக்கு! - சென்னை மாநகராட்சி ஆணையர்

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடு இருக்கும் தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து, தடுப்புகள் அமைத்து மூடியுள்ளது.

அதன்படி மாநகரில் இதுவரை 701 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மண்டல வாரியாக அதன் விவரம் பின்வருமாறு:

  • ராயபுரம் - 116 பகுதிகள்
  • திரு.வி.க. நகர் - 119 பகுதிகள்
  • வளசரவாக்கம் - 35 பகுதிகள்
  • தண்டையார்பேட்டை - 39 பகுதிகள்
  • தேனாம்பேட்டை - 65 பகுதிகள்
  • அம்பத்தூர் - 54 பகுதிகள்
  • கோடம்பாக்கம் - 59 பகுதிகள்
  • திருவொற்றியூர் - 34 பகுதிகள்
  • அடையாறு - 19 பகுதிகள்
  • அண்ணா நகர் - 30 பகுதிகள்
  • மாதவரம் - 50 பகுதிகள்
  • மணலி - 43 பகுதிகள்
  • சோழிங்கநல்லூர் - 15 பகுதிகள்
  • பெருங்குடி - 13 பகுதிகள்
  • ஆலந்தூர் - 10 பகுதிகள்

தொடர்ந்து 28 நாள்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இல்லை என்றால், அப்பகுதிக்கு தளர்வு அறிவிக்கப்படும். அதன்படி இன்று மொத்தம் 33 பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாநகராட்சி நீக்கியுள்ளது.

இதையும் படிங்க: 10 நாள்களில் கரோனாவை குறைப்பதே இலக்கு! - சென்னை மாநகராட்சி ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.