சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக, மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
-
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, 6 மகளிருக்கு வங்கி… pic.twitter.com/tLgrRj0vhN
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, 6 மகளிருக்கு வங்கி… pic.twitter.com/tLgrRj0vhN
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 10, 2023சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, 6 மகளிருக்கு வங்கி… pic.twitter.com/tLgrRj0vhN
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 10, 2023
இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான், உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது, அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து, மனது மகிழ்ச்சியில் நிறைந்து விட்டது.
இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ‘இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி’, ‘இவர்கள் ஆட்சிக்கு
வரவே மாட்டார்கள்’ என்றார்கள்.
ஆனால், நீங்கள் எல்லோரும் ‘தி.மு.கதான் ஆட்சிக்கு வரவேண்டும், தி.மு.க சொன்னால் சொன்னதை நிறைவேற்றும் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் முதலமைச்சராக வர வேண்டும்’ என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்.