ETV Bharat / state

துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு?

author img

By

Published : Dec 15, 2022, 10:16 AM IST

Updated : Dec 15, 2022, 10:45 AM IST

துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என கூறி சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியில் கீழ் உள்ள துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஜனவரி மாதம் முதல் 6 மாதங்கள் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையையும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் பி.எம்.எஸ் சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று (டிச.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் புருஷோத்தமன், மாநகராட்சியில் மொத்தம் 26 ஆயிரம் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான டென்டரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆர்டிஐ கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என குற்றஞ்சாட்டினார்.

இந்த முறைகேடு குறித்து மாநகராட்சியில் இயங்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்த அவர் மத்திய புலனாய்வு அமைப்பிடம் முறையீடு செய்ய திட்டம் இருக்கிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சியில் கீழ் உள்ள துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஜனவரி மாதம் முதல் 6 மாதங்கள் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையையும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் பி.எம்.எஸ் சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று (டிச.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் புருஷோத்தமன், மாநகராட்சியில் மொத்தம் 26 ஆயிரம் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான டென்டரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆர்டிஐ கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தில் முன்னாள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என குற்றஞ்சாட்டினார்.

இந்த முறைகேடு குறித்து மாநகராட்சியில் இயங்கும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்த அவர் மத்திய புலனாய்வு அமைப்பிடம் முறையீடு செய்ய திட்டம் இருக்கிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Last Updated : Dec 15, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.