ETV Bharat / state

குரூப் - 4 தேர்வு முறைகேடு - தொடரும் சிபிசிஐடியின் கைது நடவடிக்கை

author img

By

Published : Jan 31, 2020, 7:48 PM IST

சென்னை: குரூப் - 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதினான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவரை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு, தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலரையும் ஒருவர்பின் ஒருவராக சிபிசிஐடியினர் தொடர்ந்து கைதுசெய்து வருகின்றனர்.

இதன்படி இன்று, குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு எடுத்துவந்து விநியோகித்த பொறுப்பாளர் க. மாணிக்கவேல் மற்றும் ஏ. பி. டி பார்சல் சர்வீஸ் வாகனத்தின் ஓட்டுனர் வே. கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு

கைது செய்யப்பட்ட இந்த இருவரும், முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பதிவு எழுத்தர் ஓம்காந்தன் மற்றும் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், தொடர்ந்து சிபிசிஐடியினரின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் 39 புதிய தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு, தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலரையும் ஒருவர்பின் ஒருவராக சிபிசிஐடியினர் தொடர்ந்து கைதுசெய்து வருகின்றனர்.

இதன்படி இன்று, குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு எடுத்துவந்து விநியோகித்த பொறுப்பாளர் க. மாணிக்கவேல் மற்றும் ஏ. பி. டி பார்சல் சர்வீஸ் வாகனத்தின் ஓட்டுனர் வே. கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு

கைது செய்யப்பட்ட இந்த இருவரும், முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பதிவு எழுத்தர் ஓம்காந்தன் மற்றும் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும், தொடர்ந்து சிபிசிஐடியினரின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் 39 புதிய தேர்வர்கள் பட்டியல் வெளியீடு

Intro:Body:குரூப் - 4 தேர்வு முறைகேடு - தொடரும் சிபிசிஐடியின் கைது நடவடிக்கை.

குரூப் - 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதினான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவரை சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுக்கு தொடர்புடைய அனைவரையும் சிபிசிஐடி தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதன் படி இன்று குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்த பொறுப்பாளர் க.மாணிக்கவேல் மற்றும் ஏ.பி.டி பார்சல் சர்விஸ் வாகனத்தின் ஓட்டுனர் வே.கல்யாணசுந்தரம் என்னும் நபர்களை கைது செய்துள்ளனர்.

இன்று கைது செய்யப்பட்ட இரு நபர்களும் ஏற்கனவே சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயகுமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிபிசிஐடியின் கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும், பெரிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரனை நடைப்பெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.