ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளரிடம் சிபிசிஐடி விசாரணை - டிஎன்பிஎஸ்சி போலிஸ்சார் கைது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு உதவி ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு தொடர்பாக  உதவி ஆய்வாளரிடம் விசாரனை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு தொடர்பாக உதவி ஆய்வாளரிடம் விசாரனை
author img

By

Published : Jan 29, 2020, 3:25 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆறாவது நாளான இன்றும் விசாரனை நடைபெற்றுவருகிறது. இதில் மேலும் ஒரு உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையில் உதவி ஆய்வாளராக உள்ள ஒருவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டுள்ளதாகச் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின.

அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, சகோதரர், சகோதரர் மனைவி என ஐந்து பேரை குரூப் 2 தேர்வில் முறைகேடாகத் தேர்ச்சி பெறவைத்து அரசு அலுவலர்கள் பதவிகள் பெற்றுத்தந்ததாகத் தெரியவந்துள்ளது. அதுவும் இவர்கள் அனைவரும் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளதால் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விசாரணையில் இவர்கள் தேர்வெழுத ராமநாதபுரம் மாவட்ட தேர்ச்சி மையங்களையே தேர்ந்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது ஊரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரை தொடர்புகொண்டு தேர்ச்சிபெற பணம் பெற்றுக்கொண்டு உதவியதாகத் தெரியவந்துள்ளது.

ஆளும் கட்சிப் பிரமுகருக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அவரது குடும்பத்தினரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முக்கியத் தரகரான ஜெயக்குமாரை மூன்று நாள்களுக்கு மேலாகியும் பிடிக்கமுடியாமல் காவல் துறையினர் திணறிவருகின்றனர்.

அவர் பிடிபட்டால்தான் இந்த முறைகேட்டில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி அலுவலர்களைப் பிடிக்க முடியும் எனக் காவல் துறையினர் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:முறைகேடு புகார் எதிரொலி: குரூப் 4 தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆறாவது நாளான இன்றும் விசாரனை நடைபெற்றுவருகிறது. இதில் மேலும் ஒரு உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையில் உதவி ஆய்வாளராக உள்ள ஒருவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டுள்ளதாகச் சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகின.

அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, சகோதரர், சகோதரர் மனைவி என ஐந்து பேரை குரூப் 2 தேர்வில் முறைகேடாகத் தேர்ச்சி பெறவைத்து அரசு அலுவலர்கள் பதவிகள் பெற்றுத்தந்ததாகத் தெரியவந்துள்ளது. அதுவும் இவர்கள் அனைவரும் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளதால் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விசாரணையில் இவர்கள் தேர்வெழுத ராமநாதபுரம் மாவட்ட தேர்ச்சி மையங்களையே தேர்ந்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது ஊரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரை தொடர்புகொண்டு தேர்ச்சிபெற பணம் பெற்றுக்கொண்டு உதவியதாகத் தெரியவந்துள்ளது.

ஆளும் கட்சிப் பிரமுகருக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அவரது குடும்பத்தினரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முக்கியத் தரகரான ஜெயக்குமாரை மூன்று நாள்களுக்கு மேலாகியும் பிடிக்கமுடியாமல் காவல் துறையினர் திணறிவருகின்றனர்.

அவர் பிடிபட்டால்தான் இந்த முறைகேட்டில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி அலுவலர்களைப் பிடிக்க முடியும் எனக் காவல் துறையினர் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:முறைகேடு புகார் எதிரொலி: குரூப் 4 தேர்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல்

Intro:Body:டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக ஆறாவது நாள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறாவது நாளான இன்றும் மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் நபர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் தரகராக செயல்ப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது. அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, தம்பி, தம்பி மனைவி என 5 பேருக்கு குரூப் 2 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற வைத்து அரசு அதிகாரிகள் ஆக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களுக்கு உள்ளாகவே இடம்பெற்றுள்ளதால் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவர்கள் தேர்வு எழுத ராமநாதபுரம் மாவட்ட தேர்ச்சி மையங்களையே தேர்ந்தெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.இவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது ஊரில் நூற்றுக்கும் மேற்பட்டோரை தேர்ச்சி பெற பணம் பெற்றுக்கொண்டு உதவியதாக தெரியவந்துள்ளது. ஆளும் கட்சி பிரமுகருக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை எனவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முக்கிய தரகர் ஆன ஜெயக்குமாரை மூன்று நாட்களாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் இந்த முறைகேட்டில் தொடர்புடைய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளை பிடிக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.