ETV Bharat / state

பாலியல் தொழிலுக்கு கடத்தப்படவிருந்த தங்கையை மீட்ட சகோதரர்!

சென்னை: அரும்பாக்கம் அருகே பாலியல் தொழிலுக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட தங்கையை அவரது சகோதரர் காவல் துறையினரின் உதவியுடன் மீட்டுள்ளார்.

author img

By

Published : Feb 27, 2020, 9:04 PM IST

கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஓட்டுநரான சீனிவாசன், வழக்கம்போல் தனது காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார் ஒன்றில் அவரது 14 வயது தங்கை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், காரிலிருந்த தங்கையிடம், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டபோது, வாகனத்திலிருந்த பிரகாஷ், அவரது நண்பர் ஃபைசல் ஆகிய இருவரும் பணம் கொடுத்து பாலியல் தொழிலுக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன சீனிவாசன், அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், தனது தங்கையை அங்கிருந்து மீட்க சீனிவாசன் போராடிவந்த நிலையில், அங்கு வந்த சூளைமேடு காவல் துறையினரின் உதவியுடன் சீனிவாசன் தனது தங்கையை மீட்டார்.

பின்னர், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காகப் பிரகாஷை கைதுசெய்தனர். காவல் துறையினரின் வருகையை அறிந்த அவரது நண்பர் ஃபைசல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய கார்

பின்னர், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை சோதனைசெய்த காவல் துறையினர் காரில் கத்தி இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, காரை பறிமுதல்செய்த காவல் துறையினர் பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தப்பி ஓடிய ஃபைசலைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நாகையில் சட்டவிரோத மது கடத்தல்: இருவர் கைது, 2500 பாட்டில்கள் பறிமுதல்

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஓட்டுநரான சீனிவாசன், வழக்கம்போல் தனது காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார் ஒன்றில் அவரது 14 வயது தங்கை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், காரிலிருந்த தங்கையிடம், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டபோது, வாகனத்திலிருந்த பிரகாஷ், அவரது நண்பர் ஃபைசல் ஆகிய இருவரும் பணம் கொடுத்து பாலியல் தொழிலுக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன சீனிவாசன், அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், தனது தங்கையை அங்கிருந்து மீட்க சீனிவாசன் போராடிவந்த நிலையில், அங்கு வந்த சூளைமேடு காவல் துறையினரின் உதவியுடன் சீனிவாசன் தனது தங்கையை மீட்டார்.

பின்னர், சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காகப் பிரகாஷை கைதுசெய்தனர். காவல் துறையினரின் வருகையை அறிந்த அவரது நண்பர் ஃபைசல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய கார்

பின்னர், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை சோதனைசெய்த காவல் துறையினர் காரில் கத்தி இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, காரை பறிமுதல்செய்த காவல் துறையினர் பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தப்பி ஓடிய ஃபைசலைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: நாகையில் சட்டவிரோத மது கடத்தல்: இருவர் கைது, 2500 பாட்டில்கள் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

Kidnap issue
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.