ETV Bharat / state

திருமண உறவை தாண்டிய உறவால் காவலர் எரித்துக் கொலை!

சென்னை : திருமுல்லைவாயல் அருகே திருமண உறவைத் தாண்டிய உறவில் இருந்த பெண், காவலர் மீது  பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author img

By

Published : Nov 25, 2019, 5:16 PM IST

battalion_police_immolation

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேசன் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசன் வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். கடந்த ஆறு மாதமாக வெங்கடேசனும் ஆஷாவும் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலர் குடியிருப்பில் வெங்கடேசன் தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆஷா நாடகமாடி உள்ளார்.

இதனிடையே வெங்கடேசன் ஆஷா தன்னை கொலை செய்ய முயற்சித்து தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எஸ்வந்த் ராவ் இக்னேஷ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஆஷாவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெங்கடேசன் ஆஷாவைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் ஆத்திரமடைந்த ஆஷா பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார்.

கே எம் சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனைத்தொடர்ந்து, வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பயமில்லை - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேசன் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசன் வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். கடந்த ஆறு மாதமாக வெங்கடேசனும் ஆஷாவும் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலர் குடியிருப்பில் வெங்கடேசன் தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆஷா நாடகமாடி உள்ளார்.

இதனிடையே வெங்கடேசன் ஆஷா தன்னை கொலை செய்ய முயற்சித்து தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எஸ்வந்த் ராவ் இக்னேஷ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஆஷாவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெங்கடேசன் ஆஷாவைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் ஆத்திரமடைந்த ஆஷா பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார்.

கே எம் சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனைத்தொடர்ந்து, வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பயமில்லை - முதலமைச்சர் பழனிசாமி

Intro:திருமுல்லைவாயல் அருகே பட்டாளியன்  காவலரை அவரது கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் -சிகிச்சை பலனின்றி பலி,கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை.Body:திருமுல்லைவாயல் அருகே பட்டாளியன்  காவலரை அவரது கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் -சிகிச்சை பலனின்றி பலி,கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேசன் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

வெங்கடேசன்  வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன்  இருந்து வருகிறார். கடந்த ஆறு மாதமாக வெங்கடேசனும் ஆஷாவும் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில்  காவலர் குடியிருப்பு வெங்கடேசன் தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். அப்போது வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆஷா நாடகமாடி உள்ளார் இதனிடையே வெங்கடேசன் தன்னை கொலை செய்ய முயற்சியில் தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து தாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எஸ்வந்த் ராவ் இக்னேஷ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து ஆஷாவை கைது செய்த திருமுல்லைவாயல் காவல் துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டானர் அதில் வெங்கடேசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் ஆத்திரமடைந்த ஆஷா பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது கே எம் சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதன் தொடர்ச்சியாக திருமுல்லைவாயில் காவல்துறையினர் நேற்று கைது செய்திருந்த நிலையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.