சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேசன் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.
இந்நிலையில் வெங்கடேசன் வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். கடந்த ஆறு மாதமாக வெங்கடேசனும் ஆஷாவும் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவலர் குடியிருப்பில் வெங்கடேசன் தீப்பற்றி எரிவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெங்கடேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆஷா நாடகமாடி உள்ளார்.
இதனிடையே வெங்கடேசன் ஆஷா தன்னை கொலை செய்ய முயற்சித்து தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எஸ்வந்த் ராவ் இக்னேஷ் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஆஷாவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெங்கடேசன் ஆஷாவைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் ஆத்திரமடைந்த ஆஷா பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்துள்ளார்.
கே எம் சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனைத்தொடர்ந்து, வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பயமில்லை - முதலமைச்சர் பழனிசாமி