ETV Bharat / state

தீபாவளி கூட்டத்தில் திருடும் கும்பல் கைது

author img

By

Published : Oct 23, 2019, 4:19 AM IST

சென்னை: வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வண்ணாரப்பேட்டை திருடர்கள் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.

அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் கூட்ட நெரிசலில் திருடும் ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆனந்த், துரை பாபு, சூரிய, விஜி, அந்தோணி, ரவி, வெங்கடேசன், அருண், உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.

அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் கூட்ட நெரிசலில் திருடும் ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆனந்த், துரை பாபு, சூரிய, விஜி, அந்தோணி, ரவி, வெங்கடேசன், அருண், உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்க :

மருத்துவர் வீட்டில் 10 சவரன் நகை, சொகுசு கார் திருட்டு: தஞ்சையில் திருடர்கள் கைவரிசை

Intro:சென்னை வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன் மற்றும் கைப்பையை திருடும் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Body:வருகின்ற 27தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்குவதற்காக பழைய வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 1000க்கும் மேற்பட்ட துணி கடைகள் உள்ளன வட சென்னையில் பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களை குறி வைத்து அவர்களிடம் செல் போன் பறிப்பு கைப்பை, பறிப்பு போன்ற சம்பவங்களில் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பகுதியில் நகைக்கடைகள் உள்ளதால் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காகவும் மக்கள் பயமின்றி புத்தாடைகள் மற்றும் தங்க நகைகளை வாங்கி செல்லும் வகையில் பழைய வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்ணாரப்பேட்டை இராயபுரம், கொருக்குப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆனந்த், துரை பாபு, சூரிய, விஜி, அந்தோணி, ரவி, வெங்கடேசன், அருண், உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Conclusion:சென்னை வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன் மற்றும் கைப்பையை திருடும் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.