ETV Bharat / state

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசி போன்று நானும் வரவேண்டும் - சாய் சுதர்சன்

author img

By

Published : Jun 8, 2023, 11:02 PM IST

கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்ட சாய் சுதர்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியை போல் தானும் வரவேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்துள்ளார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்
கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் சாய் சுதர்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சாய் சுதர்சன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ஐபிஎல் 2023 சென்னை உடனான இறுதிப் போட்டியில் குஜராத் அணிதான் வெல்லும் என நினைத்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பலத்துடன் மீண்டு வருவோம். தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை எனக் கூறிய சாய் சுதர்சன், “சிறிய வயதில் இருந்து தான் சென்னை கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்துள்ளதாகவும், சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். ஆனால் என்னை குஜராத் அணி தான் தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது எனவே தற்போது அதுதான் தனது அணி” என கூறினார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படுவோருக்காக அவர் கூறிய அறிவுரையில், “நான் இந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு என் பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கமளித்தது தான் காரணம். மேலும் என் கடின பயிற்சியும், உழைப்பும் தான் என் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

நமது திறமைக்கான வரவேற்பு கண்டிப்பாகக் கிடைக்கும். தொடர்ந்து முயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். போதைப் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து தான் விலகி இருக்கவே விரும்புகிறேன், அதையே இளைஞர்களுக்கும் நான் கூறும் அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

மேளும், சிறிய வயதில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியின் பேட்டிங்கை ரசித்துள்ளதாகவும், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன் எனவும் கூறிய சுதர்சன் அவரைப் போன்று தானும் வரவேண்டும் என்பதே தனது ஆசை என கூறினார்.

மேலும் அவர், “இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேனா எனத் தெரியாது. எனது கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதிலேயே எனது குறிக்கோள் உள்ளது. நான் அகமதாபாத்தில் விளையாடினாலும் தமிழர்கள் அங்கும் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர்.

தோனி உள்ளிட்ட முன்னால் சீனியர் வீரர்களுடன் கலந்து உரையாடி உள்ளேன், நிறையே அறிவுரைகளை தனக்கு வழங்கி உள்ளனர். இந்திய அணிக்கு தகுதியாவது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் தன்னிடம் நடைபெறவில்லை” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023:'சுப்மன் கில்லுக்கு சதம் விளாசுவது டிபன் சாப்பிடுவது போல' - ஹர்திக் பாண்ட்யா பளீச்!

கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் சாய் சுதர்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சாய் சுதர்சன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ஐபிஎல் 2023 சென்னை உடனான இறுதிப் போட்டியில் குஜராத் அணிதான் வெல்லும் என நினைத்தோம். ஆனால் கடைசி நிமிடத்தில் தோல்வி அடைந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பலத்துடன் மீண்டு வருவோம். தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலரான அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை எனக் கூறிய சாய் சுதர்சன், “சிறிய வயதில் இருந்து தான் சென்னை கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்துள்ளதாகவும், சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். ஆனால் என்னை குஜராத் அணி தான் தற்போது ஏலத்தில் எடுத்துள்ளது எனவே தற்போது அதுதான் தனது அணி” என கூறினார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஆசைப்படுவோருக்காக அவர் கூறிய அறிவுரையில், “நான் இந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு என் பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கமளித்தது தான் காரணம். மேலும் என் கடின பயிற்சியும், உழைப்பும் தான் என் வெற்றிக்கு காரணமாக உள்ளது.

நமது திறமைக்கான வரவேற்பு கண்டிப்பாகக் கிடைக்கும். தொடர்ந்து முயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். போதைப் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து தான் விலகி இருக்கவே விரும்புகிறேன், அதையே இளைஞர்களுக்கும் நான் கூறும் அறிவுரையாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

மேளும், சிறிய வயதில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியின் பேட்டிங்கை ரசித்துள்ளதாகவும், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன் எனவும் கூறிய சுதர்சன் அவரைப் போன்று தானும் வரவேண்டும் என்பதே தனது ஆசை என கூறினார்.

மேலும் அவர், “இந்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேனா எனத் தெரியாது. எனது கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதிலேயே எனது குறிக்கோள் உள்ளது. நான் அகமதாபாத்தில் விளையாடினாலும் தமிழர்கள் அங்கும் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்தனர்.

தோனி உள்ளிட்ட முன்னால் சீனியர் வீரர்களுடன் கலந்து உரையாடி உள்ளேன், நிறையே அறிவுரைகளை தனக்கு வழங்கி உள்ளனர். இந்திய அணிக்கு தகுதியாவது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் தன்னிடம் நடைபெறவில்லை” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023:'சுப்மன் கில்லுக்கு சதம் விளாசுவது டிபன் சாப்பிடுவது போல' - ஹர்திக் பாண்ட்யா பளீச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.