ETV Bharat / state

சிலை கடத்தல் வழக்கு: இரண்டு அமைச்சர்கள் பெயரை பொன் மாணிக்கவேல் வெளியிட கோரிக்கை!

author img

By

Published : Nov 8, 2019, 8:22 PM IST

சென்னை: சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

idol theft case

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிட்டு தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், விசாரணைக்கு அறநிலையத்துறை மற்றும் பிற துறைகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

சிலை கடத்தல் வழக்கில் மற்றொரு மனுதாரரான யானை ராஜேந்திரன், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குற்றஞ்சாட்டிய இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமும் ஆகும். அதிகாரிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டாலும் அதற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன் மாணிக்கவேல் இதுவரை எந்த ரகசிய அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் அனைத்து தரப்பினரும் அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிட்டு தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், விசாரணைக்கு அறநிலையத்துறை மற்றும் பிற துறைகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

சிலை கடத்தல் வழக்கில் மற்றொரு மனுதாரரான யானை ராஜேந்திரன், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குற்றஞ்சாட்டிய இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமும் ஆகும். அதிகாரிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டாலும் அதற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன் மாணிக்கவேல் இதுவரை எந்த ரகசிய அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் அனைத்து தரப்பினரும் அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுமைமிக்க தலைவராக மாறுவாரா ரஜினி?

Intro:


Body:சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட தாக கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட ஐஜி பொன்மாணிக்கவேல் உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது

சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பொன்மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருத்தர் தலையிட்டு தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விசாரணைக்கு அறநிலைத்துறை மற்றும் பிற துறைகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

சிலை கடத்தல் வழக்கில் மற்றொரு மனுதாரரான யானை ராஜேந்திரன் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டிய இரண்டு அமைச்சர்களின் பெயர்களையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்

இதையடுத்து நீதிபதிகள், தமிழக பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கடமையாக செயல்படுகிறது அதிகாரிகளுக்கு எதிராக அல்ல மேலும் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்மாணிக்கவேல் இதுவரை எந்த ரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை அதனால் அனைத்து தரப்பினரும் அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.