ETV Bharat / state

இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை?

author img

By

Published : Jun 29, 2021, 3:32 PM IST

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

admissions-begin-after-improvement-test-notice-to-ugc-mhc
இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை?

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துவரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வை நடத்தலாம். தற்போது ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. இறுதித் தேர்வு எழுதாமல் அவர்களை மேல்நிலை பள்ளிப்படிப்பை முடிக்க அனுமதிப்பது முறையாக இருக்காது.

சராசரி மாணவர்கள் அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கள் திறமையை நிரூபிக்க தேர்வு எழுதவே விரும்புவர். அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தேர்வுகளை நடத்தவேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து, யுஜிசி, மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ, பார்கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து தற்போது 12ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

அரசின் முடிவில் தலையிட முடியாது

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது எனக்கூறி ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இவ்வழக்கு சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்த விவகாரத்தில் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிடவேண்டும் என கோரினார்.

இதுதொடர்பாக விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துவரும் நிலையில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வை நடத்தலாம். தற்போது ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. இறுதித் தேர்வு எழுதாமல் அவர்களை மேல்நிலை பள்ளிப்படிப்பை முடிக்க அனுமதிப்பது முறையாக இருக்காது.

சராசரி மாணவர்கள் அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கள் திறமையை நிரூபிக்க தேர்வு எழுதவே விரும்புவர். அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தேர்வுகளை நடத்தவேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து, யுஜிசி, மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ, பார்கவுன்சில் உடன் கலந்து ஆலோசித்து தற்போது 12ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

அரசின் முடிவில் தலையிட முடியாது

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது எனக்கூறி ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இவ்வழக்கு சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்த விவகாரத்தில் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை குறித்தும், அதை ஏற்காத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிடவேண்டும் என கோரினார்.

இதுதொடர்பாக விளக்கமளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.