ETV Bharat / state

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்க கூடாது? - கமல்ஹாசன் கேள்வி!

author img

By

Published : May 27, 2023, 4:06 PM IST

புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரதமருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்றக் கூடாது என கமல்ஹாசன் கேள்வி
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்றக் கூடாது என கமல்ஹாசன் கேள்வி

சென்னை: டெல்லியில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. நாளை மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக 20 எதிர்க் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்கட்சிகள் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

அதே நேரம் ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட் நாயாக் உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளன.

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் "புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது?" என நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "நாளை புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா என்பது முழு நாடும் கொண்டாடும் தருணம். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் கலந்து கொள்ளாததும் மற்றும் எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாததும், இந்த தருணத்தில் தேசப் பெருமிதம் என்பது அரசியல் ரீதியாக பிளவுபட்டு உள்ளது.

நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவு செய்து நாட்டுக்கு சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் தான் அவை நாட்டில் சட்டமாக உருமாறும்.

மேலும் நாடாளுமன்றத்தின் அமர்வுகளை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவர். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்த திறப்பு விழாவிற்கு அழைக்க வேண்டும் என நான் ஆலோசனை கூறுகிறேன். புதிய நாடாளுமன்றம் சாதாரண கட்டிடம் அல்ல. காலம் காலமாக இந்திய ஜனநாயகத்தின் இல்லமாக இருக்கக் கூடியது.

இந்திய குடியரசு தலைவர் அழைக்காதது வரலாற்றில் பெரும் பிழையாகப் பதியப்படும். இவற்றை திருத்திக் கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். குடியரசு நாட்டின் புதிய வீட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வசிக்க வேண்டும். எனவே நிகழ்வைப் புறக்கணிக்கத் முடிவு செய்து உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறேன் இந்த நிகழ்வின் மீது உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் புதிய நாடாளுமன்றத்தில் எழுப்பலாம்.

முழு நாடும் இந்த நிகழ்வை எதிர்நோக்கி இருக்கிறது. உலகத்தின் கண்கள் நம்மீது உள்ளது. புதிய நடாளுமன்றத்தின் திறப்பு நிகழ்வை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக, நமது அரசியலாக ஆக்குவோம் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம்" என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சித்தப்பா கொலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பா? சிபிஐ கொடுத்த ஷாக்!

சென்னை: டெல்லியில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. நாளை மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக 20 எதிர்க் கட்சிகள் தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்கட்சிகள் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

அதே நேரம் ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட் நாயாக் உள்ளிட்டோர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளன.

மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் "புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது?" என நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், "நாளை புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா என்பது முழு நாடும் கொண்டாடும் தருணம். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் கலந்து கொள்ளாததும் மற்றும் எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாததும், இந்த தருணத்தில் தேசப் பெருமிதம் என்பது அரசியல் ரீதியாக பிளவுபட்டு உள்ளது.

நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவு செய்து நாட்டுக்கு சொல்லுங்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் தான் அவை நாட்டில் சட்டமாக உருமாறும்.

மேலும் நாடாளுமன்றத்தின் அமர்வுகளை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவர். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்த திறப்பு விழாவிற்கு அழைக்க வேண்டும் என நான் ஆலோசனை கூறுகிறேன். புதிய நாடாளுமன்றம் சாதாரண கட்டிடம் அல்ல. காலம் காலமாக இந்திய ஜனநாயகத்தின் இல்லமாக இருக்கக் கூடியது.

இந்திய குடியரசு தலைவர் அழைக்காதது வரலாற்றில் பெரும் பிழையாகப் பதியப்படும். இவற்றை திருத்திக் கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். குடியரசு நாட்டின் புதிய வீட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வசிக்க வேண்டும். எனவே நிகழ்வைப் புறக்கணிக்கத் முடிவு செய்து உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறேன் இந்த நிகழ்வின் மீது உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் புதிய நாடாளுமன்றத்தில் எழுப்பலாம்.

முழு நாடும் இந்த நிகழ்வை எதிர்நோக்கி இருக்கிறது. உலகத்தின் கண்கள் நம்மீது உள்ளது. புதிய நடாளுமன்றத்தின் திறப்பு நிகழ்வை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக, நமது அரசியலாக ஆக்குவோம் கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம்" என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சித்தப்பா கொலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பா? சிபிஐ கொடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.