ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு

author img

By

Published : Jul 9, 2021, 10:10 AM IST

கொளத்தூரில் நில உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த மூவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

1
1

சென்னை: கொளத்தூரைச் சேர்ந்த விக்டர் டேனியல் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மனைவி காணிக்கம்(78) என்பவருக்கு சொந்தமாக 2400 சதுரடி கொண்ட காலிமனை கொளத்தூர், மாங்காளி நீதிமான் நகரில் உள்ளது. இந்த நிலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நில அபகரிப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், காணிக்கம் பெயரில் கிரையம் செய்த சொத்தின் ஆவணத்தை போல் ஒரு போலி ஆவணம் தயார் செய்து, ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

நிலஅபகரிப்பு செய்த அயனாவரத்தை சேர்ந்த சதிஷ்குமார், கொளத்தூரை சேர்ந்த சிவகுமார், நாகரத்தினம் (78) ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று (ஜூலை 8) ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்ரண்டீஸ் பணியாளர்கள்

சென்னை: கொளத்தூரைச் சேர்ந்த விக்டர் டேனியல் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மனைவி காணிக்கம்(78) என்பவருக்கு சொந்தமாக 2400 சதுரடி கொண்ட காலிமனை கொளத்தூர், மாங்காளி நீதிமான் நகரில் உள்ளது. இந்த நிலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நில அபகரிப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், காணிக்கம் பெயரில் கிரையம் செய்த சொத்தின் ஆவணத்தை போல் ஒரு போலி ஆவணம் தயார் செய்து, ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

நிலஅபகரிப்பு செய்த அயனாவரத்தை சேர்ந்த சதிஷ்குமார், கொளத்தூரை சேர்ந்த சிவகுமார், நாகரத்தினம் (78) ஆகிய மூவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று (ஜூலை 8) ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்ரண்டீஸ் பணியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.