ETV Bharat / state

தேர்தல் முடிந்தும் சோதனை நடத்த நிர்பந்திக்கிறார்கள்: மாநகராட்சி  ஊழியர் புகார்! - மக்களவைத் தேர்தல்

சென்னை: தேர்தல் முடிந்த பின்னரும் சோதனை நடத்த நிர்பந்திக்கிறார்கள் என சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

Corporation official complaint to TN EC Ceo
author img

By

Published : Apr 20, 2019, 9:28 PM IST

மக்களவைத் தேர்தலையொட்டி மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு கட்ட வாகன சோதனைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினரை திரும்பவும் சோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நிர்பந்தப்படுத்துவதாக மாநகராட்சி ஊழியர் புருஷோத்தமன் என்பவர் தேர்தல் அலுவலருக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘தேர்தல் முடிவுற்ற நிலையில் பறக்கும் படையில் உள்ள காவல் துறை அலுவலர் மற்றும் வீடியோகிராபரை நீக்கிவிட்டு ஒரு மாநகராட்சி அலுவலர் மட்டும் சோதனை செய்யுமாறு பெருநகர மாநகராட்சி சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அவர் மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது. அவர் தனியே சோதனை மேற்கொண்டால் பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும். இது தேர்தல் விதிமுறையை மீறியதும் கூட. ஆகவே ஒன்று இந்தக் குழுவில் அவர்களை திரும்ப இணைக்க வேண்டும்; இல்லையேல் குழுவை கலைக்க வேண்டும். இதைப்பற்றி தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு கட்ட வாகன சோதனைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினரை திரும்பவும் சோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நிர்பந்தப்படுத்துவதாக மாநகராட்சி ஊழியர் புருஷோத்தமன் என்பவர் தேர்தல் அலுவலருக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘தேர்தல் முடிவுற்ற நிலையில் பறக்கும் படையில் உள்ள காவல் துறை அலுவலர் மற்றும் வீடியோகிராபரை நீக்கிவிட்டு ஒரு மாநகராட்சி அலுவலர் மட்டும் சோதனை செய்யுமாறு பெருநகர மாநகராட்சி சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அவர் மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது. அவர் தனியே சோதனை மேற்கொண்டால் பல்வேறு பிரச்னைகள் எழக்கூடும். இது தேர்தல் விதிமுறையை மீறியதும் கூட. ஆகவே ஒன்று இந்தக் குழுவில் அவர்களை திரும்ப இணைக்க வேண்டும்; இல்லையேல் குழுவை கலைக்க வேண்டும். இதைப்பற்றி தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்னரும் சோதனை -  சென்னை பெருநகர மாநகராட்சி  ஊழியர் புருஷோத்தமன்  தேர்தல் அதிகாரியிடம் புகார் 

17-வது மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட பல்வேறு கட்ட வாகன சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் மற்றும் பொருட்கள் பறிமுத்ல் செய்யப்பட்டது. 

நேற்றைய முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையிரனை திரும்பவும் சோதனை செய்யுமாறு சென்னை மாநகராட்சி  அதிகாரிகள் நிர்பந்த படுத்துவதாக மாநகராட்சி  ஊழியர் புருஷோத்தமன் என்பவர்  தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, 
வழக்கமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் பணப்பட்டுவாடா மற்றும் இதர பரிசு பொருட்கள் அரசியல் கட்சிகள் சார்பில் வழங்குவதை தடுக்கவும், பறிமுதல் செய்யவும் தேர்தல் பறக்கும் படை என்ற குழு அமைக்கப்படும். அதில் கார் டிரைவர், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு விடியோக்ராபர் மற்றும் ஒரு மாநகராட்சி  அதிகாரி இடம்பெறுவர். அவர்கள் பல்வேறு கட்ட வாகன சோதனைகளில் ஈடுபட்டு  சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம், நகைகள் மற்றும் இதர பரிசு பொருட்களை பறிமுதல் செய்வர். தற்போது தேர்தல் முடிவுற்ற நிலையில் பறக்கும் படையில் உள்ள காவல்துறை அதிகாரி மற்றும் வீடியோகிராபரை நீக்கி விட்டு ஒரு மாநகராட்சி  அதிகாரி மட்டும் சோதனை செய்யுமாறு பெருநகர் மாநகராட்சி சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.அவர் மட்டும் இந்த வேலையை செய்யமுடியாது.அவர் தனியே சோதனை மேற்கொண்டால் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும்.   இது தேர்தல் விதிமுறைக்கு மீறியதும் கூட . ஆகவே ஒன்று இந்த குழுவில் அவர்களை திரும்ப இணைக்க வேண்டும் இல்லையேல் இந்த குழுவை கலைக்க வேண்டும். இதை பற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தார்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.